This entry is in the series 20100418_Issue

நாச்சியாதீவு பர்வீன்.


காலச் சக்கரம்
நினைத்தபடி ஓடும்

நாம் நினைக்காத
ஒரு பொழுதில்
திடீரென்று நின்று..
தன் வாசல் திறந்து.
விரும்பியவரை
இழுத்துக்கொள்ளும்
மரணம்..

அது ஆணாக..
பெண்ணாக.
இன்னும் குழந்தையாக
என்று..
யாராகவும் இருக்கலாம்

ஒரு பெருமூச்சி தானும்
விட அவகாசம்
கிடைக்காத தருணமது

எந்த விருப்பமும்
எந்த வெறுப்பும்
நம்மை …
திருப்பி கொண்டு வர மாட்டா.
மரணத்தின் வாசலை கடந்த பின்.

நாச்சியாதீவு பர்வீன்.
இலங்கை.

Series Navigation