This entry is in the series 20031211_Issue

ஹர்ஷவர்த்தனன்


நேரத்துக்குச் சாப்பிடுகிறவர்கள்
காலத்தில் தூங்குகிறார்கள்
தோன்றினால் கூடிக்கொள்கிறார்கள்
நல்ல கால்சராய் சட்டைதான் போடுகிறார்கள்
ஒழுங்காக அலுவலகம் சென்றுவருகிறார்கள்
எப்படியோ வீடு கட்டுகிறார்கள்
மகனைப் பொறியியல் கல்லூரிக்கும்
மகளை மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பிவிடுகிறார்கள்
ஓய்வுநாளில் உயர்தர ஓட்டல்களில் குடிக்கிறார்கள்
சேமிப்பு நிறைய இருந்தாக்கால்
சிநேகிதர்களுக்கும் கொஞ்சம் செலவழிக்கிறார்கள்
நடுநடுவே எழுதவும் செய்கிறார்கள்
உண்மையான கவிஞனைக் கண்டதும்
பதைபதைத்துப் போகிறார்கள் குற்றவுணர்வோடே
தருமனையும் துரியோதனனையும் சகுனியையும்
பீஷ்மரையும் விதுரையும் துரோணரையும்
மாயக்கண்ணனே முழுசாய் அறிவான்

**********************************************************************

Series Navigation