திரை கடல்
சத்யானந்தன்

–
கடலின் அருகில் செல்வதில் அலை ஓசையைத் தவிரவும்
பல அசௌகரியங்கள் உண்டு
சில தர்ம சங்கடங்களும்
ஆமைகளைக் கொத்திப் போக கழுகுகள்
வட்டமிடும்
மீன்களின் வீச்சத்துடன் காயும் வலைகள்
குழந்தை விற்பனையாளர்களின் நகர்வு கூவல்
சாம்பரைக் கரைக்கும் குடும்பகள்
பலூனைக் கிழிக்கும் இரும்புத் தோட்டா
சிறு பெண்ணின் ஓயாப் பேச்சு
கவனிப்பது போல் ஒரு வாலிபனின் பாவனை
அவர் எழுந்ததும் மணலுடன் உதிர்ந்து மறைபவை
நண்டுகள் மட்டுமே மணல் அலை
என்னும் புள்ளிகளைத் தாண்டாது ஆனந்தமாய்
கடற்கரையைத் தொடும் சாலையில் அமர்வதும்
பாந்தமில்லை இரைச்சல் புழுதி
கடலைத் தாண்டி என் மொழி பேசுவோரின் மண்
அவர்கட்கும் எனக்கும் இடையே கடல் மட்டுமில்லை