சொல்லுக சொல்லில்…
சுகுமாரன்

ஒவ்வொரு வார்த்தையும்
ஒரு கேள்வி
ஒவ்வொரு கேள்வியும்
ஒரு சந்தேகம்
ஒவ்வொரு சந்தேகமும்
ஒரு கல்
ஒவ்வொரு கல்லும்
ஒரு சந்தேகம்
ஒவ்வொரு சந்தேகமும்
ஒரு கேள்வி
ஒவ்வொரு கேள்வியும்
ஒரு வார்த்தை
ஒவ்வொரு வார்த்தையும்
மெளனத்தின் மிச்சம்.
**
(இரு கவிதைகளும் ‘வாழ்நிலம் ‘ தொகுப்பிலிருந்து)
n_sukumaran@rediffmail.com