சாதனங்கள்
பாரதிராமன்

நிலவைப் பார்த்துக்
குரைத்த நாய்கள்
மலையைப் பார்த்துக்
குரைக்கலாயின
பின்னர்
மனிதனைப் பார்த்துக்
குரைக்கத் தொடங்கின
இப்போதெல்லாம்
தங்களில் ஒன்றைப் பார்த்து மற்றொன்றாய்க்
குரைக்க ஆரம்பித்துள்ளன
இன்னும் சற்றுப் போனால்
தங்களைப் பார்த்தே
குரைத்துக் கொள்ளும்
குரல் உள்ளவரை
குரைப்பும் இருக்கும்.
kalyanar@md3.vsnl.net.in