கறுத்த மேகம் வெளுக்கின்றது

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

சத்தி சக்திதாசன்


எப்போது
கறுத்த மேகம்
வெளுக்கின்றதோ ?
அப்போது
மழையும் அங்கே
மறைகின்றது.

எப்போது
உண்மைக்கு
வெளிச்சம் கிடைகின்றதோ ?
அப்போதே
பொய்மை , இருள் எனும்
திரைக்குப் பின்னால்
நுழைகின்றது.

எப்போது
பசியின் கொடுமை
எனும் நாடகம்
இதயத்தில்
அரங்கேறுகின்றதோ ?
அப்போதே
சாலையோரத் தோழர்கள்
கதாநாயகர்களாக
மாறுவார்கள்.

எப்போது
உண்மையை
உண்மையாகத் தேடத்
தொடங்குவோமோ அப்போதே
எம்மை நாமும்
அறியத் தொடங்குகின்றோம்

எப்போது
தேவைகளை
தேவையற்றதாக மாற்றுவமோ
அப்போதே
ஆசைகள் அளவுக்குள்
கொண்டுவரப்படுகின்றன.

எப்போது
உள்ளத்தெளிவு
உண்மைஞானத்தை அறிவு
எனும் திறவுகோல் கொண்டு
மனதினுள் நுழைய
விடுகின்றதோ
அப்போதே
மனதத்துவம்
மறுபிறப்பெடுக்கின்றது

———————————-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்