கடலின் கூப்பாடு
விக்ரமாதித்யன் நம்பி

கடலின் கூப்பாடு
சும்மா இல்லை
மேகங்கள் திரண்டு
வந்து பெய்யும் மழை
பாறைகளில் மோதி
வரும் நதி
கண்ணகித்தாய்க்கு
தெரியும்
மேகலைச் செல்வி
அறிவாள்
மாதவிப் பூங்கொடியின் துயரம்
கானல் வரியிலிருந்தே
அரும்புகள்
மலர்கின்றன
காற்று
வீசிக்கொண்டேயிருக்கிறது
நிலக்காட்சிகள்
மாறுகின்றன
பிறகென்ன
சொன்னது சொன்னதுதான்
சூரிய சந்திரர்கள் சாட்சியாக
***