இரவுகளின் சாவித்துவாரம்
Published May 2, 2010 • By
இளங்கோ
இளங்கோ

*
வாசல்கள் திறந்திருக்கின்றன
பூட்டிச் செல்லும் தருணங்கள்
நம்மை வழிமறிப்பதில்லை..
இரவுகளின் சாவித்துவாரங்களில்
பகல்கள் எப்போதும்
ஒரு
கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன
உறவுகளுக்கான ஒப்பந்தங்களை
பாதுகாக்கும் பொறுப்பை
கதவுகள் ஏற்றுக் கொள்கின்றன
ரகசியமென முடிவாகும்
நினைவுகளின் ஆவணக் குறிப்புகளை
கவனங்கள் கொண்டு கோர்க்கும்
கோப்புகளாக்குகிறோம்
மனமென்னும்
பிரமாண்ட கட்டிடத்தின் வாசலில்
வேலையற்ற வாட்ச்மேனைப் போல
நெடுங்காலமாய்
உட்கார்ந்திருக்கிறோம்..!
*******
—