This entry is in the series 20040311_Issue

பா.தேவேந்திர பூபதி


குடத்திற்குள் போட்ட
ஒவ்வொரு கற்களாய்
மனிதன் சாதனைகளை
அடுக்க அடுக்க
அடியில் கிடந்த
குரோத எண்ணங்கள்
மேலெழுந்தது
சாதனைகளையும் மூடி மறைத்தபடி!

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில்
பிறக்காத தன்னலம்
ஆடை கட்ட ரம்பித்த பின்
நிர்வாணப் படுத்தின
ஆன்மாவையும் சேர்த்து

அடுத்தவன் முதுகில்
ஏறி அமர்ந்து
வாழ்க்கையை சபிக்கும்
கபட வேதாந்தங்களால்
கர்ப்ப கிரகங்கள்
கல்லறையாயின!

தெய்வங்கள் தெருவில்
புறம் போக்கு நிலங்களுக்கு
போட்டியிட்டன..
சண்டைக்கு ஆள் சேர்த்தபடி

ஆறாம் அறிவு
அதிகமாகிப் போனதால்
மனிதனின்
ஆசைகளுக்குக் கூட
கொம்பு முளைத்தன!

போரும் அமைதியும்
இவனுக்கு
பயிற்சியளித்தது
பழி வாங்க மட்டுமே!
—-
kousick2002@yahoo.com

Series Navigation