- இன்னொரு வகை இரத்தம்
- பழைய இலைகள்…
- உயிரோடு உரசாதே
- அவர்களும், நானும்
- பூப்பூ (பு)
- மனசாட்சி
- பூஜ்யநிலம்
- பெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..
- இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை
- கோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)
- இட்லி மிளகாய்ப்பொடி
- தேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்
- அகமுடையவனே
- பாதச் சுவடுகள்
- சமூகப்பணி
- சேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்
- மஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்
- இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை
- மேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது ?
- சமகால உளவியல் ஆய்வுகள் குறித்து
- அறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)
- நமது அகில உலகக் கலாசார சமுதாயம்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001
- ஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்
- பட்டாம்பூச்சி வாழ்க்கை
- ஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்
இரமேஷ் குமார். இரா

எனக்குள் நித்தம் நிகழ்ந்து
கொண்டிருக்கும் யுத்தம் – அதில்
மரணங்களும், பிறப்புக்களும் ஏராளம்.
எனையீன்ற அன்னைக்கு
என்னை இன்னமும் ஒரு குழந்தையாய்க்
காணும் பரந்த இதயம்!
அதில் விரவியுள்ள உண்மை
எப்பொழுதும் மாறுவதேயில்லை!
அவர்களின் தாகத்திற்கு நீர்ச்சோலை
தேடி நான் போகும் பாதையில்,
என் ஆசைகளின், கனவுகளின்
கனிகள் பழுத்துத் தொங்குகின்றன.
தாகங்களின் தாக்கங்கள் மனதை அழுத்த,
என்னில் கடிவாளங்கள் முளைத்து விட்டன.
என் பயணம் புாியாத அவர்களோ
என் நன்மைக்காக பிரார்த்திக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் நேசத்தில் நான்
நிறைந்து வாழ்கிறேன்!
என்னைச் சுற்றிலும் நிலவும்
இயக்கங்களின் சக்தியில்
நான் கலந்தே உயிர் சுகித்திருப்பேன்!
அதில் எனக்கு எந்த வெட்கமுமில்லை.
என் வார்த்தைகளின் கனம் தாங்காமல்
ஓடியவர்களுக்கு நான்
அந்நியமாகவே தென்பட்டேன்.
மற்று என் மெளனங்களில் தயங்கி,
என் புன்னகைகளில் நெருங்கிய
அவர்கள் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் என்னை நண்பன் என்கிறார்கள்!
இது வரை நான் பார்த்தேயிராத
ஓருயிாின் தோளை நனைப்பதற்கு
எனக்குள் படிந்து கொண்டிருக்கும்
கண்ணீர்த் துளிகள்!
அங்கே நான் வாழ்ந்த உடல்
சலனமின்றிக் கிடக்கின்றது;
ஒரு மரணத்தில் நான் முடிந்து விடுவதில்லை.
அவர்களின் கண்ணீாில்
என் காலடிச் சுவடுகள் கலையாதிருக்கும்.
அவர்கள் என்னை மனிதன் என்பார்!