அருவருப்பின் முகம்
Published April 23, 2009 • By
கோகுலன்
கோகுலன்

அடங்காத பசியுடன் இன்றும் வந்திருக்கிறாள்
சாத்தான்கள் கூடித் திளைக்கும் துர்வனத்தினூடாக
அலறித்திரியும் கூகையின் பார்வைகளுடன்
நிலாமுற்றத்து ரோஜாப் பூக்களின்
இதழ்கிழித்து மகிழ்கிறாள்
காலம் அவளுருவில் ஊற்றிச்சென்ற சோகம்
விசும்பலாய்ச் கசியும் வேளை
ஓலமிட்டுச் சிரிக்கிறது வன்மம்
அவள் போர்த்திய துரோகத்தின் கருமை
நிலவினை மூடி மறைக்கிறது
அவளது வேஷங்களின் வலி துடைத்து
நான் தூக்கியெறிந்த கைக்குட்டை
சூரியனை அமிழ்த்தி அணைக்கிறது
எனதுலகம் முற்றுமாய் இருண்ட பிற்பாடும்
பஞ்சாரத்தினோரம் எதிர்ப்புகள் ஏதுமற்றிருக்கும்
கோழிக்குஞ்சினையொத்த இதயத்தை
ருசிக்கும் அவளது துர்நா எச்சில் கசிக்கிறது
பலியிட்ட கிடா முண்டத்தில்
பீறிட்டுப்பாயும் செங்குருதியாய்
வழிதப்பியோடும் இவ்வாழ்க்கையை
கோரப்புன்னகையுடன் ரசிக்கிறாள்
இன்று முற்றிலும் அருவருப்பான
முகத்தினையுடையவள்
gokulankannan@gmail.com