கே.பாலமுருகன்
பற்பல மரணங்களை
ஓட்டிக் கொண்டு
வருகிறான்
ஒர் ஆட்டுக்காரன்
அவனது காலுக்கடியில்
ஊர்ந்து கரைகிறது
மரணம்
ஒவ்வொரு ஊரிலும்
ஒரு மரணத்தை
விற்றுவிட்டு
மீதமிருக்கும் அப்பாவி
மரணங்களோடு
அடுத்த ஊருக்கு
நகர்கிறான்
அவ்வளவு காலம்
வளர்த்த ஆடுகளுக்கும்
தெரிய போவதில்லை
கொலைக்காரன் வேறெங்கிலுமில்லை
தன்னை மேய்த்துக்
கொண்டிருக்கிறான் என்று
வேலிகள் உடைத்து
முனியாண்டிக்குப் பலியாகவிருந்த
நாட்டு கெடாக்கள்
கதறிக் கொண்டு
சாலையில் மரணமாக
ஓடுகின்றன
ஆட்டுக்காரனின் கொலையுணர்வைப்
பிதற்றிக் கொண்டே!
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1
- வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) கவிதை -2 (பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)
- கருணையினால் அல்ல!
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2
- சாம்பல்நிறப் பூனை
- நகரத்தில் வாழும் கிழவர்கள்
- சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி
- நூல் நயம்: தெரிந்த – கவனிக்கத் தவறிய முகங்கள்
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்
- அடவி காலாண்டிதழ்
- தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்
- சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா
- மோந்தோ -5 (1)
- முடிவு உங்கள் கையில்
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)
- நினைவுகளின் தடத்தில் – (26)
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- “வேலியை உடைக்கும் மரணம்”
- இன்னொரு கரை…
- பறக்கத்தான் சிறகுகள்
- வேத வனம் விருட்சம் 24
- காதலின் பரிமாணங்கள்
- இருக்கை
- மோந்தோ -5(2)
- நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை