பறக்கத்தான் சிறகுகள்
ராமலக்ஷ்மி, பெங்களூர்

‘உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகுமா?’
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!
ramalakshmi_rajan@yahoo.co.in