This entry is in the series 20050623_Issue

மதியழகன் சுப்பையா


நின்றபடி நீரும்
நின்றபடியே மலமும்
கழிக்கிறார்கள்
பெருநரைக் கிழங்கள்

பொக்கை வாயால்
முத்தம் பதிப்பார்கள்
பெருநரைக் கிழங்கள்

பருவ மாற்றங்களில்
உடல் நலம் கெடுவார்கள்
பெருநரைக் கிழங்கள்

அதிகம் பேசுவார்கள்
அதிகம் கேட்பார்கள்
பெருநரைக் கிழங்கள்

இடைஞ்சலாய்
இருப்பார்கள்
பெருநரைக் கிழங்கள்

உண்ணும் போது
வாயு கழிப்பார்கள்
பெருநரைக் கிழங்கள்

கதை சொல்வார்கள்
பெருநரைக் கிழங்கள்

அனுபவம் பகிர்வார்கள்
பெருநரைக் கிழங்கள்

நல்ல நாட்களில்
செத்துப் போவார்கள்
பெருநரைக் கிழங்கள்.

மதியழகன் சுப்பையா,
மும்பை

madhiyalagan@rediffmail.com

Series Navigation