நடுநிசி

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

ஒளியவன்


மழையின் குளிரில்
மெல்ல மெல்ல நடுங்கியது தேகம்
வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது
வெள்ளிநிலா மறைத்த மேகம்

சில நாய்களின் சத்தம்
சில்வண்டுகளின் இரைச்சலோடு
கூடிச் சேர்ந்து மேலும்
குரூரமாக்கிக் கொண்டிருந்தது

கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு
யாருமில்லை எனினும்
திரும்பிடும் பக்கமெல்லாம்
யாரோ நிற்பதாய் ஒரு எண்ணம்

ஆந்தையின் இரைச்சலும்
வரதட்சணைக் கொடுமையால்
அடித்துத் துரத்தப்பட்ட என்னுடைய
உறுத்தலும் அடங்கிவிடும் விடியலில்

அப்பா வரக்கூடும் அதிகாலையில்
பணத்தோடோ அல்லது பயணச்சீட்டோடோ…..

– ஒளியவன்

Series Navigation

author

ஒளியவன்

ஒளியவன்

Similar Posts