கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்
விக்ரமாதித்யன்

பேச்சி
கொடை கேட்கிறாள்
பொல்லாத இசக்கி
கொடை கேட்கிறாள்
வண்டிமலைச்சி
கொடை கேட்கிறாள்
முப்புடாதி
கொடை கேட்கிறாள்
மாடத்தி
கொடை கேட்கிறாள்
சுடலி
கொடை கேட்கிறாள்
கொடை கொடுத்தால்தான்
பிரீதியாகி சாந்தம்கொள்ளும்
பிடிகொடுத்தே பேசும்
சிறு பெண் தெய்வங்கள்
கொடை கொடுக்கவில்லையென்றால்
அடித்துத் தின்னப் பார்க்கும் ஆளையே.
***************