பவளமணி பிரகாசம்
அன்று முதல் இன்று வரை
காதல் வயப்பட்ட
கன்னியரும், காளையரும்
கனவுலகில் மிதக்கின்றார்,
கற்பனையில் பறக்கின்றார்,
கவிதையில் பேசுகின்றார்,
தலைமுடியை தங்கத்தில்
பதித்து அணிகின்றார்;
காதங்கள் கடந்து சென்று
சாகசங்கள் புரிகின்றார்;
நிலவை, நதியை,
கல்லை, மண்ணை
தூது அனுப்புகின்றார்;
கடைக்கண் பார்வையில்
விண்ணை சாடுகிறார்;
அடங்காத காளையை
பிடித்து அடக்குகிறார்;
தனியே சிரிக்கிறார்,
தனக்குள் பேசுகிறார்;
பாலும் கசக்கவே,
படுக்கை நோகவே,
பித்தாகிப் போகிறார்,
ஓர் நினைவாய் இருக்கிறார்;
கூண்டுக் கிளியாய்,
தூண்டில் புழுவாய்,
அனலிடை மெழுகாய்
உருகித் தவிக்கிறார்;
காண்பதும், கேட்பதும்,
உணர்வதும், உரைப்பதும்
மாய மந்திரம் போலும்
அவர்கட்கு மாத்திரம்
முற்றிலும் வேறாகிறது;
சுற்றம் மறந்து,
சொந்தம் துறந்து,
பகுத்தறிவை இழந்து,
ஒன்றே குறியாய்,
அதுவே வெறியாய்,
அனைத்தும் துச்சமாய்,
மோனத் தவத்தில்,
மோக சுரத்தில்,
மூழ்கித் தவிக்கும்
காதலர்களை மூடர்கள்,
சோம்பர்கள், வீணர்கள்,
பித்தர்கள் என்றெண்ணி
எள்ளி நகையாடினேந்
மின்னலாய் என் கண்ணில்
நீ தோன்றும் வரை.
pavalamani_pragasam@yahoo.com
- அவனோட கணக்கு
- மண்
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்![Fast Breeder Reactors]
- அறிவியல் துளிகள்-17
- MANAVELI PERFORMING ARTS GROUP TO PRESENT TENTH ANNUAL FESTIVAL
- திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)
- பயணக் குறிப்புகள் 2003
- பயணக் குறிப்புகள் 2003
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14
- இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)
- மன்னிக்க வேண்டுகிறோம்
- பனியின் மடியில்….
- அன்புடனும், நன்றியுடனும் லூஸிபருக்காக
- பெண்
- சிக்கன விமானம் – உரைவெண்பா
- மூன்றாம் பிறை
- நீ வருவாய் என…..
- கண்ணாடிக்கு அப்பால்
- இன்னா செய்தாரை ஒறுத்தல்…
- வாயு – அத்தியாயம் நான்கு
- நினைத்தேன்…சொல்கிறேன்…காதலும் கல்யாணமும் பற்றி…
- நசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்
- ஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.
- ராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)
- கடிதங்கள்
- விஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)
- இந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது
- என் கண்ணில்
- உயர் மொழி !
- ‘ஊக்கும் பின்னும் ‘
- வறளையின் வீச்சு
- உறவுக்காலம்
- நான்கு கவிதைகள்