This entry is in the series 20030815_Issue

தமிழ்மணவாளன்


தொலைதூரத் தொடுவானம் நோக்கிய

பயணம் தொடர்கிறது

பாதை பரந்து விரிந்து பிரமாண்டமாய்

நெரிசலேதுமின்றி

செளகர்யமாயிருக்கிறது

ஒரு சாய்வு நாற்காலியின்

இங்கிததோடு தாங்கிக் கொள்ளும்

மேகம்

உடல் உஷ்ணத்துக்கேற்றவாறு

குளிர்ந்து அணைத்துக்கொள்கிறது

மிகுந்த சந்தோஷத்தோடு

அழகியவப் பறவை

கை குலுக்கிச் செல்கிறது

இது போன்ற சுகமான பொழுதுகளில்

நினைவுகள் மட்டுமே

போதுவதில்லை

அருகாமை அவசியமாகிறது

சட்டைப் பையினுள்

மினுமினுக்கின்றன

வழியெங்கும் பொறுக்கிப் போட்ட

நட்சத்திரங்கள்

பூத்துக் குலுங்கும் நந்தவனத்துக்கு

வேலியென்றெதுவுமில்லை

மேய்வதற்கும்.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation