- முள்பாதை 56
- பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு ! (கட்டுர
- இரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2
- உருத்தலில் உருவாகி
- வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
- டாக்கா: பிசாசு நகரம்
- சத்யானந்தன் கவிதைகள்
- ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்
- சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.
- இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி
- கள்வர்க்கு இரவழகு
- தீர்வும்.. தெளிவும்!!!
- லிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.
- இதமானதொரு நகைப்பு …!
- பெயர்வு
- தண்ணீரும் நாமும்
- குழந்தை
- “மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை“ (தொடர்ச்சி-3)
- இடம்பெயர் முகாமிலிருந்து
- அவள் சொன்ன காதல்!
- விடியாக்கனவு
- வினோத மலரொன்றின் இதழ் நுனி..
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்
சுந்தரா
மனசுமுதிராத முன்னிருபதுகளில்
மாலையோடு வந்த
ஒரு
மாபெரும் உறுத்தலுக்கு,
மனசுக்குப் பிடிக்காமல்
வாழ்க்கைப்பட்டவள் அவள்…
காலைகளில் கட்டிய
கனவுக்கோட்டை யெல்லாம்
மாலையில் சிதையவைக்கும்
மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு,
ஆலையில் அகப்பட்ட
கரும்பாகக் கசங்கியவள்…
நின்றால் ஒருகுற்றம்
நிலைமாற முன்னேறி
நடந்தாலும் குற்றமென்று,
கண்ணால் சுட்டெரித்த
கனலுக்குக் கட்டுப்பட்டுப்
பெண்ணாக மண்டியிட்ட
பேதைப் பிறவியவள்…
எண்ணிக்கைக் கடங்காத
இருட்டுக் கதைகளைச்
எண்ணியெண்ணி அழுதிருந்தால்
இருண்டிடும் வாழ்க்கையென்று,
எல்லாவற்றையும்,
மண்ணாகிப்போன தன்
மனசுக்குள் புதைத்தவள்…
இன்று,
எண்ணைந்து வயசுகளின்
இறுதிப் பிராயத்தில்,
பெண்ணென்றால் இவளென்று
அவள்
பொறுமையைச் சிரசிலேற்றித்
தன்னோடு சேர்த்துக்கொள்ளத்
தவித்திடும் உறவுகள்…
உறுத்தி உறுத்தியே
ஓய்ந்துபோன உறவுக்கும்,
மருத்துவம் சொல்லி
மனதை மாற்றுமளவுக்குப்
பக்குவப்பட்டுப் போனது
அவளது
அப்பழுக்கில்லாத மனசு…
எப்படிப் பார்த்தாலும்
இவளுடைய பெருமைக்கு
மொத்தக் காரணம்
எப்பவும் நான்தானென்று
கண்ணீரைமீறி உண்மை கரைபுரள,
அங்கே,
புடமிட்ட பொன்னில்கோர்த்த
வடமாகச் ஜொலித்தது முத்து!