வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

ஞாயிறு அசுரன்


புடவி (யுனிவாிஸ்) என்பது நம்மால் அறிய இயன்ற பருப்பொருள்களின் தொகுதி. பருப்பொருள் என்பது இருக்கின்ற ஒன்று, அதன் இருப்பு தன்னளவில் பருப்பொருள் தொகுதிகளான நமது புலன்களின் பண்புகளை மாற்றுவதன் நூலம் நம்மால் அறியப்படுகிறது. இங்கு அறிதல் செயலைச் செய்கின்ற மனிதனும் பருப்பொருள் தொகுதிதான். அதாவது அறிபடுபொருளான பருப்பொருள் தொகுதியின் பாகமாகத்தான் அறிதல் செயலைச் செய்கின்ற மனிதன் இருக்கிறான்.

எ.கா.

பேனா.

அதனுடைய இருப்பு உங்கள் கண்களில் சில பருமையான (ஃபிசிக்கல்) மாற்றங்களை நிகழ்த்துகிறது. இந்த மாற்றங்கள் எல்லா மாற்றங்களையும் போன்றே சங்கிலித்தொடாி மாற்றங்களை உண்டாக்குகின்றது. ஒட்டுமொத்தமாக ‘இயக்கம் ‘ நிகழ்கிறது. ஓரு பருப்பொருளில் நிகழும் மாற்றம் – வினை தானாகவே துவங்க இயலாது; ‘முன்னாி ‘ நிகழ்ந்த ஏதோ ஒரு வினையின் விளைவே அது; ‘பின்னாி ‘ ஓீி மாற்றம் விளைய தான் வினையாகிறது. இந்த வினை – விளைவு – வினை- விளைவு சங்கிலியை இயக்கம் என வரையறுக்கலாம். இயக்கம் நிகழும்போது அதிலிருந்து காலம் கசிகிறது, ஙூனியக் காலத்தில் எந்த மாற்றமும் நிகழ முடியாது. பேனா தொடாிந்து நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆகவே பேனா என்ற பெயரில் நாம் அறிவது கண்ணில் ஒரே மாதிரியான மாற்றத்தைத் தொடாிந்து நிகழ்த்திக்கொண்டிருக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியைத்தான். இத்தகைய ‘இயக்கம் ‘ ஒரு புடவிக்கு ஒன்றுக்கு மேல் இருக்க முடியாது. அல்லது வேறு வாீித்தைகளில் சொல்வதானால் இயக்கம்தான் இந்தப் புடவி.

நாம் இருக்கின்ற புடவி அல்லது இயக்கத்துடன் எந்தத் தொடாிபும் இல்லாத ஒரு புடவி அல்லது இயக்கம் ‘இருப்பதற்கு ‘ சாத்தியங்கள் இருக்கின்றன. அல்லது நமது புடவி மட்டுமே இருந்து கொண்டும் இருக்கலாம். (வேறு புடவி ‘இருக்குமா ‘ என்று கேட்பதே ஒரு வகையில் தவறுதான் – ஏனென்றால் இருத்தல் என்பதும் காலத்தைத் தனது பண்பாகக் கொண்டிருப்பதால் – நாம் இங்கு ஒரு புதிய சொல்லை ஆக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.)

இப்பொழுது அந்த வேற்றுப் புடவி எப்படியெல்லாம் இருக்கலாம் என்று நாம் கற்பனை செய்ய முயல்வோம். அது நம்மை விட்டு தொலைடூரத்தில் இருக்கலாமோ என்று கற்பனை செய்ய இயலாது. ஏனென்றால் டூரம் என்பது நமது புடவியின் பண்பு. நாம் இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்தக்கணத்தில் அங்கு என்ன நிகழுமோ… முடியாது. ‘இந்தக்கணத்தில் ‘ என்பதில் காலம் இருக்கிறது. காலம் நமது புடவிக்கு மட்டுமேயான பண்பு. உண்மையில் உங்களால் கற்பனையே செய்ய இயலாது.

நாம் இப்பொழுது அறிதல் வெளுயின் ஒரு திசையில் விளிம்பினை அடைந்துவிட்டோம்.

———————————————————————————————————-

gnayiruasuran@yahoo.co.in

Series Navigation

அசுரன்

அசுரன்