உஷ்ண வெளிக்காரன்

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


கொதித்துருகும் வெயிலினை
ஊடுருவிக் காற்றெங்கும்
பரந்திடா வெளி

வியாபித்து
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம்

வெப்பம் தின்று வளரும்
முள்மரங்கள்
நிலமெங்கிலும்
கனிகளைத் தூவுகின்றன

உச்சிச் சூரியனுக்கும்
வானுக்கும் வெற்றுடல் காட்டி
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்
ஆயாசமாகப் படுத்திருக்கும்
சித்தம் பிசகியவன்
புழுதி மூடிய பழங்களைத் தின்று
கானல் நீரைக் குடிக்கிறான்

கோடை
இவனுக்காகத்தான் வருகிறது போலும்

– எம்.ரிஷான் ஷெரீப்,

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்