குழந்தைக் கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


01

முன்பொரு நாள்
சொன்ன கதையை

முழுதாய் திருப்பிச்

சொல்லி வந்தவன்

முடிவைச் சற்று

மாற்றி சொல்லியதில்

தெனாலிராமன்

தன் தவறை

அப்படியே

ஒப்புக் கொண்டிருந்தான்

அரசனிடம்.

கதைகளிலும்

கபடமில்லாமல்

இருக்கின்றனர்

குழந்தைகள்.

0

02

முதலிரண்டு நாள்

என் முறையென்றும்

மூன்றாவது நாள்

தன் முறையென்றும்

சொன்னவன்

தன் முறை நாளன்று

தான் சொன்னது

தவறென்று சொல்லி

அன்றும் என்னையே

கதை சொல்ல வைத்தான்.

குதூகலமாய்
ஒப்புக் கொள்கின்றன

குழந்தைகள்

தன் தவறுகளையும்.

o

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி