எனது மூன்று வயது மகள்
ராம செல்வி
எனது மூன்று வயது மகள்
என்னோடு பேச மறுக்கிறாள்
நான் வம்படியாக தூக்கினாலும்
விலகிகொண்டு வெறுப்பாய் பார்கிறாள்
அம்மாவே உலகம் என்று ஆகிக்கிடந்தவள்
சுவரின் மூலையில் சோர்ந்து கிடக்கிறாள்
என் இரண்டாவது மகள் பிறந்து
இரண்டு வாரம்தானே ஆகிறது,
என்ன செய்ய,
சின்னத்தங்கையின் சிறு விரல் தொட்டு
சிரித்துக்கொள்கிறாள்
நான் தொட்டு தூக்கும்போது
நகர்ந்து கொள்கிறாள்.
தாய்பால் கொடுக்கும்போது
தள்ளி நின்று
தான் யாரோவாகிப் போனதாய்
மெல்ல என் தலையனையில் தலைவைத்து
படுத்துக்கொள்கிறாள்
என்ன செய்வது
என் கண்களின் கசியும் கண்ணீர்துளிகன்
அவள் காயம் ஆற்றுமா?
rm_slv@yahoo.com