சாமிசுரேஸ்
சுவிஸ்
விழுமியச் சின்னங்களின்
மூடிய சுகங்கள்
மொழிப்பிறழ்வின் அசைவினு}டே
மிதமாய்ச் சிதையும்
உடைந்த காலத்தின்
கீறியெறியப்பட்ட சுவடுகளை
முதுகுவரிகளின்
பள்ளத்தாக்குகளில் செருகியபடி
இடுக்கண் நகரும்
நடைமுறைகளின்போது
சில நம்பிக்கைகள்
சாத்தியத்திற்காக துடித்துக்கொண்டிருக்கும்
இக்கணங்களில்
விழிமூடி
ஆழ்பார்வையின்
மனவெளியில் நிரம்பினேன்
பதியம்போட்டு வைத்திருந்த
உன் பார்வைகள்
என் உடல் முழுதும் முளைவிடத்தொடங்கியது
அது
சுகமான கனவசைவுகளை
அணுக்களில் திணித்து
விசையுடைத்தோடிய பொழுது
நீ
என்னசெய்துகொண்டிருப்பாய்
என் பார்வைகளை
நீ என்ன செய்தாய்
இன்னும்
ஆழகாய் வைத்திருக்கிறாயா
அல்லது
அவையும் அழிந்து போயிற்றா
என் கிராமத்து
ஒற்றையடிப்பாதையின்மேல் வரைந்திருந்த
அறுகம்புற்கள்போல்
மீண்டும் மௌனமாகிறேன்
மொழியின்
உள் நிகழ்வுகளை மறந்து
மௌனங்களால்
விதைக்கப்பட்டவள் நீ
காயமாகிப்போன நெருடல்களுடன்
கேள்விகளைப் புதைத்துக்கொண்டு
வலி நகர்த்தும் மனிதன் நான்
காலமுகச்சிறகுகள்
யதார்த்தச்சுமைகளை வெளித்தள்ளி
விஷப்பூவாய் உருமாறுகிறது
நீயோ
பருவவேஷங்களில்
உன் உணர்வுகளைத் திணித்து
திசைக்கொன்றாய் தொங்கிக்கொண்டிருக்க
நான் இன்னும்
அரைகுறை ஆன்மாவால்
ஆழப்பட்டுக்கொண்டிருக்கிறேன்
-29.12.2006
sasa59@bluewin.ch
சாமிசுரேஸ், சுவிஸ்
- யாரிந்த நீதிபதிகள் ?
- சதாம்
- நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…
- நீர்வலை (5)
- திண்ணை ஏழு ஆண்டுகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)
- ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்…
- படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…
- சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா?
- காதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி !
- மடியில் நெருப்பு – 19
- தாயகமே உன்னை நேசிக்கிறேன்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி
- புதிய காற்று
- ஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்
- விடாது துரத்தும் ஜின்
- யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்
- ஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்
- Limp scholarship and Nadar bashing
- திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு
- அம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா
- பிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்
- பசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்
- ஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 18
- நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”
- இன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்
- ஒரு செம்பு சுடு தண்ணீர்.
- பொய் – திரைப்பட விமர்சனம்
- உராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை
- கடித இலக்கியம் – 39
- திருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு
- இலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்
- பேய்மழை
- புத்தக அலமாரி
- * ஒற்றை சிறகு *
- விறைத்துப்போன மௌனங்கள்
- பெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- உடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்
- மீசை