உணர்வும் மனசும்
நளாயினி தாமரைச்செல்வன்
____
நினைவுக் கவலைகளை
மூட்டை கட்டிவைத்துவிட்டு
இன்று மட்டும்
மனதுக்கு அமைதி வேண்டி
மலைப்பகுதி ஒன்றில்.
யாரும் இல்லை.
ம்! றிலாக்சாய் மனசு.
இனிமை இனிமை
ஆகா இன்பப்பொழுது.
வேலைப்பழு
குழந்தைகள் சினப்பு
கணவனின் அன்புத்தொல்லை
இன்னுமே வாசிக்காத
ஊரில் இருந்து வந்த கடிதம்
எல்லாம் விலத்தி
ஆகா இன்பம் இன்பம் .
கீச் கீச் என என்
காதுவரை தடவிபோகும்
குருவிகளின் சங்கீதம்.
எறிந்து விட்ட
சில்லறையாய்
மரக்கிளைகளுக்கால்
தெரியும் சூரியனின்
ஒளிக் கதிர்கள்.
பச்சைப் பசுமையாய்
இதம் தரும் குளிர் ஒன்று
என்னை படர்வதாய்.
சுகமான அனுபவம் தான்.
நீண்ட நேரமாய்.
நிலவுக்கு பயந்து
பரதேசம் போனதாய்
என்னிலை ஆனது.
ஈ ஒன்று
ஈஈ என்று
இன்னல் செய்து
என் அமைதியை
குழப்பி நின்றது.
கையை ஓங்கினேன்
அடித்துக்கொல்ல
மின்னலாய் மனதுள்
பாவம் பாவம் .
அதுவும் உயிர்தானே.
கொல்வதை நிறுத்தி
ஈயை ரசிக்க
மனசு இசைந்தது.
பறப்பதும்
தன் ஈர உதடு பதித்து
முத்தமிட்ட படி
என்னில் அமர்வதும்
கிசுகிசுத்து
கதைகள் பல
என்காதில் சொல்வதும்.
என்ன சொன்னது
என உணர முயன்ற எனக்கு
இடியொன்று
என்னுள் இறங்கியதாய்.
ஆ பாவம்…
இத்தனை நேரமும்
ஈஈ என்று
தனக்கே உரிய
எத்தனை துன்பத்தை
எனக்கு சொன்னதோ…. ?
நளாயினி தாமரைச்செல்வன்.
15-6-2000
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி
- இப்போது ?
- உணர்வும் மனசும்
- இறைவா நீ இறந்துவிட்டால் ?
- கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- 70.பெரியபுராணம்
- இலவச வெளிச்சம்
- எடின்பரோ குறிப்புகள் – 4
- இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்
- நியு யார்க் நிறுத்தம்
- சிதறும் நினைவுகள்
- சம்மதம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1
- முருகனும் சிம்ரனும்..
- பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு
- தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு
- சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….
- ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை
- வியாக்கியான இலக்கியம்
- நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2
- பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11
- படிக்க என்ன இருக்கு ?
- கடிதம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
- துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006
- ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை
- சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம் – 25-12-2005 மாலை 6:30
- கடிதம் ( ஆங்கிலம் )