விழி, மொழி, பழி

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

அனந்த்


அல்லிஉன்றன் விழியலவோ என்றேன்
அழகியவள் அகலப்பின்னால் சென்றேன்

…. அல்லியென்றால் பகலிலென்கண்
…. அலர்வதும்ஏன் புகலுமென்றாள்

சொல்லிழந்து தலைகுனிந்து நின்றேன்!

*****

பாகுமொழி என்றுரைப கர்ந்தேன்
பாவையவள் நோகப்பின்தொ டர்ந்தேன்

…. பாகதுதான் உருவெடுக்க
…. வேகுமத னாலுவமை

ஆகஇய லாதெனஉ ணர்ந்தேன்!

*****

பெண்மயிலே, வா!என அழைத்தால்
பெருஞ்சினமே கொண்டுதீ விழித்தாள்

…. மண்ணிதனில் மயில்களிலே
…. பெண்ணைவிட ஆணழகுன்

எண்ணமெலாம் தீதெனப் பழித்தாள்!

*****

ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்