விட்டு விடுதலையாகி….
கீதா ஷங்கர்

ஆறு வயது மகனுக்கு
ஆழ்துளையில் அகப்பட்ட
அறியாச் சிறுவனும்…
அப்பாவால் குத்திக் கொல்லப்பட்ட
இரண்டுங்கெட்டான் சிறுமியும்..
மூக்குக் கண்ணாடி காமிராவில் பதியப்பட்ட
லஞ்சப் பேரக் காட்சிகளும்…
இராணுவ வீரனின் மனைவியைக்
கற்பழிக்கப்பட்ட கந்தரகோளமும்
நட்சத்திர ஹோட்டலின்
தீவிரவாதிகளின் அட்டகாசங்களும்..
ஓன்றாய்த் தான் தெரிகிறது.!
தொலைக் காட்சியில் சரணடைந்த
அம்மாவிடம் இருந்து,
ஒரு நாள் விடுதலை என்று.!
g
eethashanker67@hotmail.com