- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்
- பால் பத்து
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-2
- சென்னை இலக்கிய நிகழ்வு
- மழை ஆடை (Rain Coat)
- கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்
- எள்ளிருக்கும் இடமின்றி
- நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘
- சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்
- தொடரும் கவிதைக் கணம்
- டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்
- கடிதம் பிப்ரவரி 11,2005
- ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)
- பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்
- கருமையம் வழங்கும் நாடகங்கள்
- மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
- கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்
- கடிதம் பிப்ரவரி 11, 2005
- மனவெளி நாடக விழா
- தளப்பரப்பில் ஒலிகடத்தும் கருவிகளும் செல்பேசிகளும்
- பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)
- சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று
- சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்
- சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)
- ஓணான்கள்
- நினைப்பும்.. பிழைப்பும்..
- து ணை – 6
- திரை
- அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பரெல்லாம் பாடையிற்போவர்! ( பாகம்:1 )
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (பாகம்:2)
- பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்
- கூ ற ா த து கூ ற ல்
- இடையினம்
- மெளனவெளி
- பிரிய மனமில்லை
- பேசி பேசி…
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )
- நிஜங்களையும் தாண்டி…
- ‘இக்கணம் ‘
- மோகமுள்
- வெறுப்பு வர்ணம்
ஆ. மணவழகன்

இளமையிலிருந்தே
எனக்கு உன்னைப் பிடிக்கும்!
என் வீட்டாருக்கும்
உன்னைப் பிடிக்கும் என்பதால்….
நம் உறவிற்கு
இடையூறு எண்ணியதில்லை அவர்கள்!
உன் முகம் காணாத காலை
முழுமையாய்த் தோன்றுவதில்லை எனக்கு!
என் கை படாது
கண் உறங்குவதில்லை உனக்கு!
என் அந்தரங்கம் முழுவதும்
நீ அறிவாய்!
என் மேனியெங்கும் மேகமாய்
தினம் படர்வாய்!
உன்னை நினைத்தாலே
மகிழும் என்மனம்!
உன்னைப் பிரிந்தாலும்
பிரியாது உன் மணம்!
வெளியூர் பயணத்திலும் – உன்னை
வேறாய் எண்ணி
விட்டுச் சென்றதில்லை நான்!
அவசரத்தில்,
அழைத்துச் செல்ல மறந்த
அந்த நாட்களிலோ….
அழகழகாய்
பலரைப் பார்த்து
ஆசை கொள்ளும் மனம்!
‘விலையைக் கொடுத்து
நோயை வாங்குவானேன் ?! ‘
விலக்கி வைக்கும் அறிவு!
வெட்கப்பட வைக்கும் நீ,
என்னிடம்
வெட்கப்பட்டுப் பார்த்ததில்லை நான்!
என்னை
அழகாய்க் காட்ட ஆசைகொண்டு
சில நேரம், அழவும் வைத்திருக்கிறாய்!
என் தேவைக்காக
தினமும் தேய்கிறாய்!
இத்தனை
பிரியமுடன் வாழ்ந்துவிட்டோம்…
உன்னைப் பிரிய மனமில்லை!
நகக்கண் அளவே ஆனபோதும்
நங்கை உன்னைக் கட்டிக் கொண்டேன்!
இன்று வாங்கிய சலவைக் கட்டியோடு
பழைய கட்டி….
உன்னையும் சேர்த்து ஒட்டிக் கொண்டேன்!
—-