நிகழ்வின் ரகசியம்
பா.தேவேந்திரபூபதி

காலமும் இடமும்
தீர்மானிக்கின்றன நிகழ்வை
இடம்
தமதான போது
காலம் இறக்கைகள் மூடி
வாயிற்படிகளில்
இரைதேடி அலையும்
காலம்
தாழ்பணிந்து கிடக்கையில்
அகிலமே போதாத இடமாய்
தோன்றக் கூடும்
இரண்டும் சேரும்
ஒரு பொழுதில்
இல்லாதிருப்போம் என்றைக்கும்
kousick2002@yahoo.com