This entry is in the series 20081218_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அலையடித்துக் கொண்டிருக்கிறது
ஓய்ந்தபாடில்லை
கரும்பாறையாய் இறுகி உட்கார்ந்து
அலைகளை சிதறடிக்க விருப்பம்.
தெரியாத திசைகளிலிருந்தும் புறப்பட்டு
நெருங்கிமுத்தமிடும் காற்றில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது ஈரம்.
மேகம் தொட்டுரச எண்ணும்
வேளிமலைக் காற்றின் வருடல்
கடலும் காயலும் அலைபுரண்டு
விட்டு விலகி
வெற்றிடமாகும் பொழிக்கரை.
தோள் சுமக்கும் பல்லக்குகளை
வீசி எறிந்துவிட்டு
புறாக்களோடும் கிளிகளோடும்
பேசத் தொடரும் தேடல்
உடலை சுமக்கமுடியாமல்
நழுவி ஓடி விடுகிறது உயிர்
மழையாகவோ நதியாகவோ
அருவி மாலையாகவோ
பிரபஞ்சம் முழுதும் உருகி வழிய
ஒருமாயவனத்தின் வரிகளுக்குள் கடல்


mylanchirazool@yahoo.co.in

Series Navigation