This entry is in the series 20010812_Issue


அரிசி – 1/2 ஆழாக்கு

பிஞ்சுக் கத்தரிக்காய் – 200 கிராம்

வற்றல் மிளகாய் – 4

முந்திரிப் பருப்பு – 2

தனியா – 1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1/2 ஸ்பூன்

பெருங்காயம் – 1 துண்டு

கடுகு – 1/4 ஸ்பூன்

சாதத்தை உறைப்பாக வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியா, மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து அரை ஸ்பூன் உப்போடு வைத்துப் பொடி செய்து கொள்ளவும். பிறகு அதே வாணலியில் அரைக் கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகைப் போட்டு, அது வெடித்தவுடன் பொடி பொடியாக நறுக்கி கத்திரிக்காயைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி இவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். பாதி வெந்தவுடன் செய்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு மேலும் கத்தரிக்காய் வேகும் வரை வதக்கி, சாதத்தின் மீது கொட்டி, முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொட்டி நன்றாகக் கலந்து வைக்கவும்.

Series Navigation