ராமன் தவறிவிட்டான்
பிரகாஷ் நாக்ராஜ்

பொன் கேட்டோம்
கொடுத்தாய்
பொருள் கேட்டோம்
கொடுத்தாய்
சொல்லியும் கேளாமல் உன்னை
கடவுள் ஆக்கினோம்
நீ மறுத்தாய்
எங்கள் சொல்
கேட்டுயிருந்தால்
கடயுளாகிய உன்னுடைய அயோத்தியா
உன்னுடனே இருந்திருக்கும்
ஆனால் மனிதனாக
வாழ்ந்த நீ
உயில் எழுத
மறந்து விட்டாய்.
தவறு செய்துவிட்டாய்
ராமா….
பூலோகத்தில் இன்று
எத்தனை பங்காளிகள்
உன் நிலத்தை பங்கிட!
மறுடியும் வேண்டுகிறேன்
நீ கடவுள்
என ஒத்துக்கொள்.
அப்படியாது இவர்கள்
உன் நிலத்தை விட்டு
விலகட்டும்.
pnagraj@netvigator.com