சத்தி சத்திதாசன்
மனதிலோர் மயக்கும் சங்கீதம்
மிதக்கும் மெல்லிய
உணர்வுகள்
மணக்கும் மல்லிகை வாசம் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்
அந்திவானத்திலே
அழகுச் செந்நிறக்கீறல்
அரவணைக்கும் அந்த
அமைதியான தென்றல் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்
இரவோடு போரடி
வெற்றிவாகைசூடி
பகலெனும் வீதியில் வலம்
வந்து
சிந்திய இரத்தம் மேனியைச்
சிவப்பாக்க , ஒளிரும் ஆதவன் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்
ஏரோட்டிச்
சோறுபடைக்கும் அந்த
ஏற்றமிகு உழவத் தோழன்
களைப்பாற இல்லம் ஏகும் நேரம் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்
நெஞ்சச்சிறையினில்
அடைத்த காதலை
அவிழ்த்து , உள்ளம் பொங்க
இனிய கதை பலபேச
கடலின் ஓரத்திலே
காத்திருக்கும்
காதலர் கூட்டம் – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்
விடியலை நோக்கி ஏங்கும்
விதி வீழ்த்திய
கூட்டமொன்று தமக்கு
நாளைய பொழுது
நன்றாகவே விடியும் எனும்
நம்பிக்கை துளிர் விடும் நேரமது – ஆம்
மாலைநேரத்தின் பிரவேசம்
உலகம் ஓய்வின்றி
உருளுது
காலங்கள் இங்கே
காற்றாய்ப் பறக்குது
இரவுகள் இருளுது
விடியல்கள் வெளிக்குது
மாலைகள் இனிக்குது
ஆனால் தோழனே !
எனக்கும் உனக்கும் அந்த
மலைநேரப் பிரவேசம் ?
காத்திருப்போம்.
—-
sathnel.sakthithasan@bt.com
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- பட்டேல்கிரி
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- பாட்டி கதை
- மழையாக நீ வேண்டும் – 1
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- என் கேள்வி..
- பூரணம்
- சுண்டெலி
- இறைவன் எங்கே ?
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்