பூவும் நாரும்
புதியமாதவி

ஓடும் வண்டியில்
உரசியது வெட்பம்
சூடிய பூக்களில்
சூடு பரவியது
கைகள்
தாள்களைப்
புரட்டிய போது
பதவியின் கண்கள்
தாவணியைப் புரட்டியது..!
குளிர் அறையின்
வெட்பம் தாங்காமல்
வெள்ளை நிறப்பூக்கள்
வெதும்பிக் கருத்தது
சூரியன் குளிர்காயும்
சந்திரப் படுக்கையில்
பதவிக்கும் பணத்துக்கும்
பாஞ்சாலி பகடைக்காய்
வாடியது – அந்தப் பூக்கள்
வாழ்கிறது – பூவின் நார்கள்.
***
புதியமாதவி
மும்பைய் – இந்தியா
puthiyamaadhavi@hotmail.com