திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பூவின் முகவரி

This entry is in the series 20030119_Issue

மு.சேவகன்


(அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் குழந்தையை அனாதையாகப் போட்டுச் சென்ற அன்னையைப் பார்த்து குழந்தை பேசுவதாக எழுதிய கவிதை)

நான் ஆகாயம் ஏற்காத விண்மின்
இஇரு மேகங்கள் மோதிக்கொண்டதில்
… பூமிக்கு வந்த வானம்
மானுடப் பரிணாம வளர்ச்சியின்
… அவமானச் சின்னம்

அன்னையே…
கார் மேகத்தை கண்டு
வசந்தமென நீ ஏமாந்தது
என் குற்றமல்லவே… ?
அறிவு அடைபட்ட விளையாட்டிற்கு
நான் கேள்விக்குறியா… ?
தொலைந்து போன பிள்ளையை
பெற்றோர் தேடுவர்
‘தொலைந்து போ ‘ என்று கிடத்திய
உன்னை நான் தேடமாட்டேன்

அன்னையே…
பத்து மாதந்தான் சிறை என்றிருந்தேன்
அனாதை முத்திரை குத்தி -என்னை
ஆயுள் கைதியாக்கி விட்டாயே!
உன் வசந்தத்திற்காக
நான் பாலை வனத்திலா… ?
குயிலின் இரக்கம் கூட
உன்னிடம் இஇல்லையே ?
தளிராகிய நான் சாபமிடுகிறேன்
தாய் மரமே நீ மலட்டுமரமாக…!
இஇன்னொரு முகவரி இஇல்லாப் பூ
பூக்காதிருக்க…

***
s_appukutty2002@yahoo.com.sg

Series Navigation

About மு.சேவகன்

மு.சேவகன்

View all 1 articles →

பூவின் முகவரி

This entry is in the series 20030104_Issue

-ஆ.பா.அருண் கணேஷ்


ஓயாது யுத்தம் துரத்த
ஓடி ஒளிந்தது
என் குழந்தைப் பருவம்

குண்டுகள் உமிழ்ந்த சத்தம்
செவியில் படும் முன்பே
குடும்பங்கள் காலாவதியாயின

துப்பாக்கி சேவல் கூவினால் மட்டுமே
விடியல்…
எங்கள் ஊரில்

பொம்மைகளை தொடும் முன்பே
என் தலையணை கீழே துப்பாக்கி

சிதைந்த உடல்களை ஒன்று சேர்த்தே
கூட்டல் கணக்கு கற்றுக் கொண்டேன்
பாடசாலைகள் படிக்க அல்ல
பதுங்க மட்டுமே

அதோ…
உடல் கழட்டிய தலையில்
இரண்டு காலான்கள்
பட்டாம்பூச்சியின் சிறகில்
இரத்த ஓவியங்கள்

என் தாயின் முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்
பூவின் முகவரி மட்டும் கேட்காதீர்கள்
என் ஈழத்தில் பூக்கள் பூத்து
ஆண்டுகள் பலவாகிவிட்டன.

Series Navigation

About ஆ.பா.அருண் கணேஷ்.

ஆ.பா.அருண் கணேஷ்.

View all 3 articles →