ஸ்ரீபன்
எரிகிறது எங்களின் வீடு
ஆனால் நீங்களோ
குருதி தோய்ந்த வன்மத்தோடும்
பைத்தியக்காரனின் சிரிப்போடும்
கும்மாளமிடுகிறீர்கள்
எரிப்பவனை விட்டுவிட்டு
எரிவதற்கான காரணத்தைதேடி
காலத்தின்மீது எம்மவர் விட்டுச்சென்ற
காலடித்தடங்கள் மீது
பூதக்கண்ணாடி கொண்டு அலைகிறீர்கள்
நெருப்பை முதலில் அணைத்துவிட்டு
பிறகு காரணம்தேடலாம் என்றபோது
புகைமண்டலத்துக்குப்பின்னால் நீங்கள்
ஓழிpந்துகொண்டிருக்கிறீர்கள்
மறந்துவிட்டதாக நினைத்த உங்களின் கடந்தகாலம்
நடு இரவில் விழித்துக்கொண்டு
உங்களையே உற்றுப்பார்க்கிறது
நடு இரவில் யாருக்கும் தெரியாமல்
உங்களின் கண்களிலிருந்து விழும்
கண்ணீர்த்துளியை துடைத்துக்கொள்வது
உங்கள் மனச்சாட்சிக்கு மட்டுமே கேட்கும்
வீதிகள் கடந்து நகரங்களெல்லாம் கேட்கும்
எங்களின் கூக்குரலை தொடர்;ந்து நீங்கள் வரும்போது
அது பைத்தியக்காரரின் கூடாரமாகத் தோன்றலாம்
உங்களுக்கு
நீங்கள் கேட்கவிரும்பாத பாடலொன்று
அங்கே ஒலித்துக்கொண்டே இருக்கிறது
ஸ்ரீபன்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- மே 2009 வார்த்தை இதழில்…
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- தலைவாசல்
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- நேசகுமாருக்கு என் பதில்
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- மூர்த்தி எங்கே?
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- மனச்சுமை
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- வேத வனம் – விருட்சம் 34
- பூங்கா!
- அதிரூபவதிக்கு…..
- ஐந்து கவிதைகள்
- மரணம் பேரின்பம்
- புத்திஜீவிகள்
- தூரதேசத்திருந்து
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009