புத்திஜீவிகள்
Published May 14, 2009 • By
ஸ்ரீபன்
ஸ்ரீபன்
எரிகிறது எங்களின் வீடு
ஆனால் நீங்களோ
குருதி தோய்ந்த வன்மத்தோடும்
பைத்தியக்காரனின் சிரிப்போடும்
கும்மாளமிடுகிறீர்கள்
எரிப்பவனை விட்டுவிட்டு
எரிவதற்கான காரணத்தைதேடி
காலத்தின்மீது எம்மவர் விட்டுச்சென்ற
காலடித்தடங்கள் மீது
பூதக்கண்ணாடி கொண்டு அலைகிறீர்கள்
நெருப்பை முதலில் அணைத்துவிட்டு
பிறகு காரணம்தேடலாம் என்றபோது
புகைமண்டலத்துக்குப்பின்னால் நீங்கள்
ஓழிpந்துகொண்டிருக்கிறீர்கள்
மறந்துவிட்டதாக நினைத்த உங்களின் கடந்தகாலம்
நடு இரவில் விழித்துக்கொண்டு
உங்களையே உற்றுப்பார்க்கிறது
நடு இரவில் யாருக்கும் தெரியாமல்
உங்களின் கண்களிலிருந்து விழும்
கண்ணீர்த்துளியை துடைத்துக்கொள்வது
உங்கள் மனச்சாட்சிக்கு மட்டுமே கேட்கும்
வீதிகள் கடந்து நகரங்களெல்லாம் கேட்கும்
எங்களின் கூக்குரலை தொடர்;ந்து நீங்கள் வரும்போது
அது பைத்தியக்காரரின் கூடாரமாகத் தோன்றலாம்
உங்களுக்கு
நீங்கள் கேட்கவிரும்பாத பாடலொன்று
அங்கே ஒலித்துக்கொண்டே இருக்கிறது
ஸ்ரீபன்