- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !
- சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!
- மேற்கு உலகம்!
- இழந்த பின்னும் இருக்கும் உலகம்
- சீரியல் தோட்டம்
- சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!
- அக்கினியின் ஊற்று……
- குடி கலாச்சாரம்?
- “படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்
- ஒரு சுனாமியின் பின்னே…
- ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24
- மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்
- ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்
- மீசை
- காதலே ஓடிவிடு
- பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா
- ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு
- தொட்டிச் செடிகள்
- “பெயரில்லாத நண்பனின் கடிதம்”
- பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை
- மாலை நேரத்து விடியல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
- மாத்தா ஹரி – அத்தியாயம் 28
- பிடுங்கிகள்
- கண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது
- பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்
- ரசனை
- மகத்தானவர்கள் நாம்
- ஆடும் கசாப்புக்காரனும்!!
- வீடு
- இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி
- மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…
- கடிதம்
- இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்
கரு.திருவரசு

அலைகடல் என்பதையும் அலைக்கடல் என்பதையும் ஒன்றுபோலக் கருதி எழுதுகிறார்கள். அது சரியா?
அலை + கடல் = அலைகடல்.
கடல் என்பதன் பொருள் தெரிந்ததுதான். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்து முந்நீர் என்று பெயர்பெற்றது கடல்.
“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள” என இராமாயணத்திலும், “வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டு” எனத் திருவாசகத்திலும் வரும் “ஆழி”தான் கடல்.
அலை என்பதற்கும் பல பொருள் உண்டுதான். நாம் இங்கே அலைவதை – அசைவதை – அசைப்பதை மட்டும் பொருளாகக் கொள்வோம்.
வெறும் கடலை மட்டும் குறிப்பிடும்போது அலைகடல் என்றாலும் அலைக்கடல் என்றாலும் குற்றமில்லை. ஒரு நிகழ்ச்சியோடு கடலை இணைத்து எழுதும்போது அலையும் கடலுக்கும் அலையை உடைய கடலுக்கும் உள்ள கருத்து வேறுபடும்.
ஓயாமல் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவனை அலைகடலுக்கு ஒப்பிடலாம். கடல் அசைந்துகொண்டே – அலைந்துகொண்டே இருப்பதால், சுறுசுறுப்பாகத் தன் பணிகளைச் செய்துகொண்டிருப்பவனை அலைகடலுக்கு உவமையாக்கலாம்.
அவனை அலைக்கடல் போன்றவன் என்று சொல்லக்கூடாது. அது அவனுக்குப் பொருத்தமான உவமை ஆகாது.
அலைகடல் = அலையும் கடல், அசையும் கடல்.
அலைக்கடல் = அலையையுடைய கடல்
thiruv36@yahoo.com