நேற்றின் சேகரம்
Published February 5, 2004 • By
திலகபாமா
திலகபாமா

ஈரம் தோய்ந்திருந்த
கொல்லைப் புறக் கதவாய் நானும்
நிிலையோடு பொருந்த மறுக்க
அடித்து சாத்தியாயிற்று
திருஷ்டி கழித்து
தீயில் கரைய விட்ட சூடமோடு
எரியும் ஆசைகளோடு
முன் கதவும் தாழிட
உரை குத்திய பால்
நீருள் கன்னிமை காக்க
மூழ்கடிக்கப் பட்ட சோறு
சூடேற்றிய குழம்பு
எல்லாம் பார்த்து பார்த்து மூடி வைக்கப்படது
என்னையும் சேர்த்து
எதை தொலைத்து விடாமலிருக்கனும்
என் ற கேள்வியுடன்
தொலைந்த இருளோடு
நேற்றைய நிஜம் கரைந்து போயிமிருக்க
மூடி வைத்திருந்த புத்தகத்துள்
எழுதப் பட்டிருந்த கவிதை
சேகரம் செய்திருந்தது
யாராலும் சேமிக்க முடியாத
நேற்றைய பொழுதின்
நிஜங்களின் படிமங்களை
—————————
mathibama@yahoo.com