This entry is in the series 20081120_Issue

பாண்டித்துரை


கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

அப்துல்கலாம்

சொல்லிக்கொண்டே இருப்பார்

ஆழமான கனவு

கொஞ்சம்

நீளமான கனவு

ஆமாம்

என் கனவை

நாளை பிறக்கும்

குழந்தையும்

சுமக்கப் போகிறது(தா)

நரை விழுந்த

கிழத்தின் துடிப்புகூட

நம்மில் பாதியாய்

ஞாபகபடுத்திக் கொள்கிறேன்

ஒவ்வொரு செல்லடியின்

சப்தத்திற்கு பின்பு

நாளை நனவாகும் என்று

விதைக்கப்பட்ட ஆன்மா(க்கள்)

உலவிக்கொண்டிருக்கிறது

அந்த நம்பிக்கை

விடியும் ஒரு நாள்

ஈழத்தில்

(இந்த கவிதை 16.11.08 அன்று சிங்கப்பூர் பெக்கியோ சமூகமன்றத்தில் கவிச்சோலை அமைப்பு நடத்திய மாதந்திர கவிதைப் போட்டியில் நனவான கனவு என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது)

Series Navigation