தயிர்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

பவளமணி பிரகாசம்


மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன்
மனம் திரியாமலே தனித்திருந்தேன்
என் துணையோடேஇணைந்திருந்தேன்
சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன்
என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன்
முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன்
உரைகுத்திய கெட்டிக்காரத்தனத்திலே
மணங்கூடி உயர்ந்தேன் ஊட்டச்சத்திலே
மீண்டும் பாலாய் மாறாத தயிரானேன்
யாண்டும் ஞாலம் பெருக உயிரானேன்
—-
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

author

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

Similar Posts