This entry is in the series 20090305_Issue

நிஷாந்தன்


என்ன சொல்ல வருகிறாய் என்கிற
என் ஊகத்தின் கதவில்
பட்டுத் தெறித்தன
சொல்லி முடியாத உன் சொற்கள்

நீ அறையை விட்டு நீங்கிய பின்
உன்னுடன் செல்ல
எத்தனிக்கவேயில்லை
உனது சொற்கள்

சிதறிய சோற்றுப் பருக்கைகளைப்
போன்ற அவற்றை
கவனமாக சேகா¢க்க முயன்றேன்

எழுத்துக்களாகக் கிடந்த அவை
வார்த்தைகளாக உருப் பெற்று
புகுந்து கொண்டன
ஏதோ ஓர் அகராதிக்குள்

என் புத்தக அலமா¡¢யின்
கனம் கூடியபின்னும்
தரையெங்கும் மினுங்கியது
சொல்லி முடியாத உனது சொற்கள்

poet.nishanthan@gmail.com

Series Navigation