மதுரபாரதி
பொட்டலச் சாராயம் குடித்து பிரியாணி தின்று
லாரியில் ஏறிப் பட்டணம் போய்
முன்னாளில் கண்ணகியிருந்த கடற்கரைக்குப்
போகிற வழியெல்லாம்
யாரோ ஒரு புலிக்கோ சிறுத்தைக்கோ ஜே போட்டு
கண்ணாடி வைத்துத் தைத்த கரகாட்டக்காரியின் ஜம்பரில்
அண்ணன் ரூபாய் சொருகக் கைதட்டி
புலியாட்டம் சிலம்பாட்டம் ஆடி
மலைத்து நின்ற பஸ் வரிசை பார்த்து
ஜன்னலோரப் பெண்ணுக்குக் கண்ணடித்து
அவள் முகந்திருப்ப இளித்து
அண்ணாசாலையில் வேர்வை தெளித்து
தொடை தெரிய வேட்டி மடித்துக் கட்டி
உலகத்தை உலுக்குவதாய்த்
தலைவர்கள் பேசுகையில் கொட்டாவி விட்டபடி
விஜயைப் பார்க்கமுடிந்தல் நன்றாக இருக்கும்
அஜித்தானாலும் பரவாயில்லை என நினைத்து
கூட்டம் முடிந்து ராவோடு ராவாய்ப்
புறப்பட்டு ஊர் வந்து இறங்கியதும்
அண்ணாச்சியிடம் சொன்னது
அடுத்தவாரம் எந்தக் கட்சிக்கு அண்ணே
என்னை மறந்துறாதே.
—-
- இழந்த யோகம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- கோயிலுக்கு
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- இந்திய இளவரசர்களே!
- மெளனம்
- பயணம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- மாற்றம்
- சின்னப் பூக்கள்
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- ஞாநிக்கு மீண்டும்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- உதிரும் சிறகு
- தலைப்பாரம்…..
- குழந்தை யேசு
- காவல்
- தீ தித்திப்பதில்லை…
- தேவகோட்டை – சிவகங்கை