- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)
- இது எங்கள் கதை
- அந்த மலர்க் கூட்டம்
- உருமாறும் உறவுகள்
- பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
- வயதென்ன ?
- எச்சம்!
- இதே கார்த்திகை
- பழமொழியும் பாட்டியும் அம்மாவும்
- கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்
- சான்றுகள்
- கண்ணாடிகள்
- கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நீரில் மூழ்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேரும் நெடுநாட் துயர்கள் (3) (New Orleans Aftermath Blues After Katrina Attack)
- ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை
- நந்தன் இல்லாமல் நடராஜரா ?
- மனித வதை!
- போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2
- தியா: முஸ்லிம் மடோனா
- கற்பும், கருத்துச்சுதந்திரமும்
- மழை
- நாடோடி மனம் – பிரம்மராஜன்
- புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!
- பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)
- இலக்கியத்தில் பெண்கள்
- தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII
- மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம் – சர்வதேச தமிழ் குறும்பட விழா
- கடிதம்
- கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு
- உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!
- சோமு தங்கச்சியும் குஷ்புவும்
- வட்டமேசை
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எப்படி ஆக்கலாம்
எனது கடைசி கானத்தை ?
மெய்வருந்திப் பெற்ற
மனதின்
மகிழ்ச்சிகள் அனைத்தும்
எனது கானத்தில்
பின்னிக் கொள்ளட்டும்!
புல்லினம் காடாய் அடர்ந்து
புதர்கள் பெருகிப்
புவித்தளம் நீட்சி யாகும்
மகத்துவம் எடுத்துச் சொல்லட்டும்!
அகண்ட உலக னைத்தும்
மகிழ்ச்சியாய் நடனமிடும்,
பிறப்பு, இறப்பெனும் இரட்டைச்
சகோதரர்
பிணைத்துக் கொண்ட
பிறவி
உறவினை எடுத்துக் கூறட்டும்!
மொட்டிதழ் விரிந்த செந்தாமரை போல்
மட்டிலாத் துயர்கள்
நிலைத்துக்
கண்ணீர் குவிக்க வைக்கும்
சூறாவளி அடிப்புகள்,
கோர தாண்டவம் ஆடி
ஆரவார மூட்டிப்
பெருகும்
வேதனை சிரிப்பு
எனது
கீதத்தில் மலரட்டும்!
தம்மிட முள்ள
பொருள் அனைத்தையும்
தெருப் புழுதியில் வாரி யிறைத்து,
ஒரு வார்த்தை சொல்லாத
உவகைப் பண்பு
என்னிறுதிப் பாடலில்
ஒலிக்கட்டும்!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 20, 2005)]