அனந்த்
உணர்வெனக் கூறுவ(து) உலகில் ஒவ்வொரு
கணமும் காணும் காட்சியின் விளைவாய்
நினைவிற் கிளர்ந்திடும் நுகர்வாம் அஃதே
வனையும் கவிதையின் வழியே நுகர்வோர்
உளத்தில் உவகையும் கவல்வும் அழுகையும்
களிப்பும் தோற்றிக் கவிதையின் பயனை
யாவரும் பெற்றிடப் பாவலர் கண்ட
வல்லமை வாய்ந்த வழியென அறிவோம்
சொல்வளம் சிறப்பதும் நல்லுணர் வாலே
கவிதையின் அழகைக் கற்பனை மிகுத்தல்
புவியில் என்றும் புதிதல எனினும்
குவியும் உணர்வில் குறையெதும் விளையின்
கவிதை இறக்கும் சிறப்பெதும் இன்றி;
தொல்நாள் முதலாய் இன்னாள் வரையில்
வெல்லும் தமிழில் விந்தை புரிந்த
பற்பல கவிஞரின் சொற்றிறம் மினுக்கும்
அற்புதக் கவிதைகள் ஆயிர மாக
உணர்வு கவிதைச் சிறப்பை உயர்த்திக்
கொணர்தலைக் காட்டும்; குறிப்பாய்க் குறளுக்(கு)
உயர்வைத் தருவது வள்ளுவன் உணர்ந்து
பயந்த மொழியின் பாங்கே அன்றோ ?
இங்குயான் யாத்த எளிய பாடலில்
எங்குமே விரவி இருப்பதும் உணர்வே
மெய்யாய் இதனை உணர்ந்துஉம்
ஐயம் தீருமின்! யாவும் உணர்வே!
—-
ananth@mcmaster.ca
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15,2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- அரசியலும் ஆங்கில மொழியும்
- பாப்லோ நெருடா
- Capturing the Freidmans (2003)
- பாரென்ஹீட் 9/11
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- கடிதம் ஜூலை 15, 2004
- உணர்வு
- சமாதானமே!
- நிஜங்களாக்கு….
- அதே கனவு
- கழிவுகள்
- மழை வருது
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- விழிப்பு
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- மெய்மையின் மயக்கம்-8
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911
- தீருமா சென்னையின் தாகம் ?
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- குண்டுமணிமாலை
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- நாகூர் ஹந்திரி
- உள் சாரல்
- நிஜங்களாக்கு….
- எங்கள் தாயே
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- வெந்தயக் கோழிக்கறி
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- கணவனைக் கொல்லும் காரிகை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- காற்றுக்கிளி
- சாவோடு வாழ்தல்
- கருவறை சொர்க்கம்
- சத்தியின் கவிக்கட்டு 15
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- துணைநலம்