This entry is in the series 20090813_Issue

கே.பாலமுருகன்


ஒரு சொற்ப கதறலாக இருக்கலாம்
யாருக்கும் கேட்காத அளவிற்கு இரைச்சலாக இருக்கலாம்
அழுது வடியும் கண்ணீரின் சோம்பல் ஒலியாக இருக்கலாம்
கைகளை நீட்டி அவர்கல் கேட்பது
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சராசரி வாழ்க்கையைத்தான்.

அகம் விரிகிறது
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு இழப்பிலும்
ஒவ்வொரு பிரிவிலும்
ஒவ்வொரு நகர்விலும்
ஒவ்வொரு கால்களிலும்
ஒவ்வொரு முதுகு மூட்டைகளிலும்.
அகம் ஒரு நாடாகியிருந்தது
நான் அகதியாகிருந்தேன்.

ஈழ சகோதரர்கள் நினைவுகளுடன்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation