வ.ஐ.ச.ஜெயபாலன்
இது ஓர் அதிஸ்டம் இல்லாத
போராளியின் கவிதை
மேலும் சரியாகச் சொல்வதெனில்
ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின்
மரண வாக்குமூலம் போன்ற
அதிஸ்டமில்லாத கவிதை இது.
எரிகிற அன்னை வீடில் நின்று
என்னை வசைப்பாடிகிற சகோதரரே
நான் எதிர்பார்ததில்லையே
ஒரு துண்டு நிலத்தை செப்புச் சல்லியை
ஒரு வாக்கை
அல்லது ஆதரவான உங்கள் பாராட்டுதலை.
என் பிள்ளைகளின் உணவை உண்டும்
என் மனைவியின் தண்ணிரை அருந்தியும்
பாடுகிறேன் நான்.
அன்னைவீட்டுக் கூரை எரிகிறது
என் சகோதரர்களோ
பாகப் பிரிவினைச் சண்டையில்.
தண்ணீர் ஊற்றுவதானால்
அவன் பக்கத்துக் கூரையில் ஊற்றாதே என்று
ஒரேமாதிரிக் கத்துகிறார்கள் இருவரும்.
தீப்பெட்டியோடு நிற்கிற அயலவனோ
தண்ணீர்க் குடத்தை வீசிவிட்டு ஓடடா என்கிறான்
துப்பாக்கியை நீட்டியபடி.
என் துர் அதிஸ்டம் அதுவல்ல
அடுத்த பக்கத்தில் தீயை அணைத்தால்
சுடுவோம் என்கிற சகோதரர்கள்.
அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்றே
நம்ப விரும்புகிறேன்.
அன்னை விட்டில் இருந்து
உடுத்த ஆடையுடன் துரத்தப்பட்டு
புத்தளச் சேரியில் அலைகிற
என் கடைக்குட்டித் தம்பிக்காக
அன்னையும் நானும் அழாத நாளில்லை.
என் சகோதரரே
கூட்டுக் குடும்பத்தில் ஒன்றாய் இருங்கள்
அல்லது பாகம் பிரித்துக் கொள்ளுங்கள்
எப்படியாவது தொலைந்து போங்கள்
மோதலில்லாது.
முதலில் தீயை அணைக்கக்
கூக்குரலானது என் கவிதையும் பாடலும்.
எனது கையில் தண்ணீர்க் குடம்.
எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டும்.
கண்ணிரைத் துடைத்து
என் கடைக் குட்டியை அழைத்துவரவேண்டும்.
மரண வாக்குமூம் போன்ற
அதிஸ்டமில்லாத கவிதை இதுதான்.
தீயை அணைத்து தூங்கப் போகமுன்
எனது கடைக்குடியை வரவேற்க
அவனது அபகரிக்கப் பட்ட அறையை
செப்பனிட்டபடியே விழித்திருக்க வேண்டும்.
எனக்கான துப்பக்கிக் குண்டே
அல்லது என்னுடைய நீண்ட இரவே
அதுவரை தாமதித்து வா.
visjayapalan@yahoo.com
- ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1
- நான்…….?
- கடிதம்
- மனவெளி கலையாற்றுக் குழு – 14 ம் அரங்காடல்
- மெய் எழுத்து வெளியீடு
- கடிதம்
- மலர் மன்னனின் …..மனவெளிக்கு!
- குணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா
- மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு
- இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்
- ‘கதைச்சொல்லி’யும், கதையும்
- விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.
- லாகவமா? லாவகமா?
- காலம் மட்டுமே அறியும் ரகசியம்
- காதல் – King Arthur – கார்ல் ஜுங்
- சிவாஜி முதல் சிவாஜி வரை
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6
- கனகமணி!
- தீபச்செல்வன் கவிதைகள்
- அன்னையின் வீடு
- புரிந்து செய்!!
- நித்திரை யோகம்/மலம்கொண்ட உடல்
- ஒரு சொல்.. தேடி..
- காதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி !
- கோவிலில் எம்மதத்தார்
- தமிழர் நீதி
- ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
- “கிராமம்”
- தொடர் நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-11
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 15