பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

கார்கில் ஜெய்



உங்களின் கேள்விகளுக்கும் பொய்களுக்கும் வருகிறேன் :

// 1.மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனுக்கு நேசனாகத்தான் இருக்க விரும்புகிறீர்களா?//

ராமபிரான் ஒன்றும் சரணடைந்தவர்களை முகம்மது நபி போல ஈவு இரக்கமின்றிக் கொல்லவில்லை. ஏன் இராவணனுக்கே இன்றுபோய் என் மனைவியுடன் நாளைவா என்று வாய்ப்பளிக்கிறார் இராமபிரான்.

முகம்மது நபி சண்டையிட்ட கூட்டத்திடம், ‘சரணடையுங்கள், உங்களுக்கு மன்னிப்பு அளிக்கிறேன்’ என்கிறார் நயவஞ்சகமாக;

“எதிரிகளை ஏமாற்றுவதற்காக பொய் சொல்லுதல் அனுமதிக்கப்பட்டதாகும்” — அல் புஃகாரி (84:64-5) – திருக் குர்ஆன் 2:225 & 40:28

பிறகு சரணடைந்தவர் அனைவரையும் கொடூரமாக வெட்டிச் சாய்க்கிறார். பிறகு ‘இத்தனை நம்பிக்கையில்லாதவர்களைக் கொன்றால், சுவர்கத்தில் ஐந்து டஜன் கன்னிப் பெண்களை அடையலாம் என்கிறார். பாவம், இவர்களுக்கு கன்னிப் பெண்களை சப்ளை செய்வதுதான் சுவர்கத்தில் அல்லாஹ்வின் தொழிலா?

எனவே கொலைகளால் வளர்ந்த முகமதியர்களுக்கு இராமபிரானைப் பற்றிப்பேச அருகதை இல்லை.

உங்களுக்கு ஒரு சவால்: இராமபிரான் வாலியைக் கொன்றதில் நீதியும், நியாயமும் இருக்கிறது. வாலிக்குத் தகுந்த தண்டனையையே வழங்கினார் இராமபிரான். இதை நான் நிரூபித்தால் நாஹூர் ரூமி என்ன செய்வார்?

// 2. நேசகுமார் அவர்களே, நான் மேலே கொடுத்திருப்பது போல, உங்கள் பெயர், முகம், முகவரி இவற்றைக் கொடுக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா? //

தைரியத்துக்கும் குருட்டு தைரியத்துக்கும் வித்தியாசம் உண்டு.

ராஜபுத்ர ஹிந்து இளவரசன் பிருத்விராஜன் முஸ்லீம் கோரி முகம்மதுவுக்கு 1191ல் உயிர்ப் பிச்சை அளித்துவிட்டான். ஆனால் கோரி முகம்மது 1192ல் செய்த முதல் காரியமே பிரித்விராஜனைக் கொன்றதுதான்.

தலித் முதலான ஹிந்துக்களுக்களை அடிமை போல் நடத்தக் கூடாதெனக் கோரித் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட குரு தேஜ் பகதூரின் தலையை வெட்டி மக்களின் பார்வைக்கு வைத்தார் முகமதிய மன்னர் ஔரங்கசீப்.

வரலாறு இப்படி இருக்கும்போது நேசகுமாரின் முகவரியைச் சொல்லித் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளச் சொல்லி நீங்கள் கேட்பது சந்தேகத்தை உருவாக்குகிறது. பாவம் உங்களுக்கும் சொர்க்க ஆசை வந்துவிட்டதோ என்னமோ. உங்கள் முகவரியை நீங்கள் கூகுள் மேப்புடன் சேர்த்து வெளியிடலாம். அது தைரியம். ஏனென்றால் உங்களுக்கு நன்றாகத் தெரியும் ஹிந்துகள் பற்றி; நேசகுமார் அவ்வாறு செய்ய மாட்டார். அவ்வாறு வெளியிட்டால் அது குருட்டு தைரியம்.

உங்களுக்கு ஒரு கேள்வி : நேசகுமாரின் முகவரியை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? எந்தவிதத்தில் அது உங்களுக்கு அவசியமாகிறது?

// கொலை, கொள்ளை, வன்முறை, யுத்தங்கள் எல்லாம் எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் நடந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயம்தான் வன்முறை வளர்க்கும் சமுதாயம் என்று யாரையும் முத்திரை குத்துவது அறிவீனம். //
எல்லா இடங்களிலும் நடந்தாலும், பெரும்பாலான இடங்களில் இஸ்லாமிய வெறிகாரணமாக நடந்துள்ளாதால் நேசகுமார் சொல்கிறார். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். viktan.com – ல் மும்பைத் தாக்குதல்களுக்கும், ஏன் ஈராக்கில் ஷியா – சுன்னி முஸ்லீம்களின் சண்டைக்கும் கூட R.S.S தான் காரணம் என்று சகோதரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். கருத்து சுதந்திரம் இருக்கிறது; என்ன செய்ய முடியும்?
//தூக்கு மேடையில் மாதச் சம்பளத்துக்காக கயிற்றை இழுப்பவனும் கொலைதான் செய்கிறான்//.
அதனால்தான் நாடாளுமன்றத்தைத் தாக்கிக் கொலை செய்த அப்சல் குருவைத்தூக்கிலிடும் கொலையை அவன் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது ஆகவே கொலைபுரிதல் தவறில்லை என்கிறீர்களா?.
//ஆனால் அவனை யாரும் குற்றம் காண்பதில்லை. //
என்ன சொல்ல வருகிறீர்கள்? அப்படியிருக்கும் போது ஏன் ஜிஹாதிகளில் ஹிந்துக்களை கொல்வது என்ன தவறு என்கிறீர்களா?

//எல்லாவற்றையும் விவாதிக்கலாம். அரேபியாவில் நடந்ததையும் என்னவென்று பார்க்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கை எதற்காக, எப்போதெல்லாம் உயர்ந்தது என்றும் பார்க்கலாம். அதற்கு முன் நமது நாட்டில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன என்று பார்க்க வேண்டுமல்லவா? ஹிந்து மதம் என்றால் என்ன? ஹிந்துக்கள் என்பவர்கள் யார்? இந்திய மண்ணின் மைந்தர்கள் யார்? உண்மையான இந்திய வரலாறு என்ன? வேத கால மதம் என்ன சொன்னது? மனு தர்மம் என்ன சொல்கிறது? ஏகலைவனின் கட்டை விரல் ஏன் குருதட்சனையாகக் கேட்கப்பட்டது? ஒரு பெண்ணை ஐந்து பேர் பகிர்ந்து கொண்ட கலாச்சாரம் யாருடையது? வர்ணாசிரமம் என்பது என்ன? அதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? அது எங்கே இருந்து வந்தது? கூட்டம் கூட்டமாக, கும்பல் கும்பலாக ஏன் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்? இந்தியாவில் உள்ள தலித்களும், சீக்கியர்களும், நாத்திகார்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ செய்கிறார்களா? எதற்காக அம்பேத்கார் ஒரு லட்சம் தலித் மக்களோடு பௌத்தம் தழுவினார்? சிவனடியார்களுக்கும் வைணவர்கள்களுக்கு இடையே நடந்தது என்ன? ஜைனர்கள் ஏன் கழுவில் ஏற்றப்பட்டார்கள்? குஜராத்தில், கோயமுத்தூரில் நடந்தது என்ன? எல்லாவற்றையும் பார்க்கலாம். //
ஆமாம், பேராசிரியரே, என்ன இது? கேள்வி கேட்டுட்டு ‘அலசிப் பார்க்கலாம், பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு தீடீர்னு எதுவுமே சொல்லாமல் எஸ்கேப் ஆனால் எப்படி? திண்ணையை வாசிப்பவர்கள் எல்லாம் என்ன பைத்தியக் காரர்களா? அல்லது எதற்குமே உங்களுக்கு பதில் தெரியவில்லையா? உண்மையில் கேள்வி கேட்டுவிட்டு ஓடி ஒளிந்துள்ளவர் நீங்கள்தான் பேராசிறியரே. நேசகுமார் அல்ல.
உங்களுக்கு தெரியவில்லை என்றால் நானே பதில் சொல்கிறேன்
3. ஹிந்து மதம் என்றால் என்ன?
இமாலயத்தின் தெற்கே, ஹிந்து குஷ் மலைகளின் தென்கிழக்கு பகுதி முதல் கன்னியாகுமரி, கடாரம், கம்போடியா என்று பரவி, உலகத்தின் உன்னத கலாச்சாரமாகவும், வாழு, வாழவிடு என்ற கண்ணியத்துடனும், பிராந்திய மக்களின் கலாச்சாரங்களை மதித்து, ஆக்கிரமிப்பின்றி வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையே ஹிந்து மதம். மிகுந்த கருத்து சுதந்திரமும், அறிவாளிகளுக்கு மதிப்பும், விஞ்ஞானத்திற்கு வரவேற்பும் அளித்து வளர்த்த மதம். உலகம் உருண்டை என்றவர்களுக்கு விஷமும் கொடுக்கவில்லை, அல்லாஹ்தான் சந்திரனை இரண்டாக உடைத்துவிட்டாரே என்றும் சொல்லவில்லை ஹிந்து மதம்.
4. ஹிந்துக்கள் என்பவர்கள் யார்?
மேற்சொன்ன முறையில் மிக உயர்ந்த நிலையில், பொன்னும் பொருளும் சேர்ந்து பின்னும் குணத்துடன் ‘வாடிய பயிரைக் காணும்போதெல்லாம வாடினேன்’ என்னும் அன்புடன் வாழ்ந்தவர்கள் ஹிந்துக்கள்.
5. இந்திய மண்ணின் மைந்தர்கள் யார்?
ஆரியர்கள், தோடர்கள், படுகர்கள், மராத்தியர், தலித்கள் இன்னும் எல்லாரும் மண்ணின் மைந்தர்கள். மரபணு அறிவியலின்படிப் பார்த்தால் திராவிடர்கள், ஆப்பிரிக்கர், சிங்களவர்கள், ஆஸ்திரேலிய பழங்குடியினர் அனைவருமே மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்த வந்தேறிய ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். முஸ்லீம்கள் 1100 ம் ஆண்டுக்குப் பின் கொள்ளைக் கூட்டமாகமாகவும், சிலர் வியாபாரிகளாகவும் வந்தேறினார்கள்.
6. உண்மையான இந்திய வரலாறு என்ன?
உண்மையான இந்திய வரலாறு அம்பேத்கரே சொன்னது : ஆரியர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பது. முஸ்லீம்கள் வந்தேறிகள் என்பது. நேரு எழுதாமல் மறைத்தது. ஆரியர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தில் வாழ்ந்தனர் என்பதை தொல்லியல் ஆராய்ச்சி நிரூபிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தனர் என்று முல்லாக்களும், பெரியாரும், நேருவும் திரித்தது.
இஸ்லாமிய கொள்ளைக் கூட்டம் புகும் முன்னர் உலகத்தின் மிகச் சிறந்த பொருளாதாரமாகவும், அறிவியலில் மேம்பட்டதாகவும் விளங்கக் காரணமாக இருந்ததும் இந்த ஹிந்து மதம்தான். (1193ம் வருடம்வரை உலகத்தின் மிகச் சிறந்த நாடாக, பொருளாதாரத்தில் நெம்பர் 1 ஆக விளங்கிய இந்தியா – Citibank historical financial journal, 100 Wall St, NYC, NY, 2006) இந்தக் இஸ்லாமியக் காட்டுமிராண்டிகளினால், மிகப் பெரிய அறிவாளிகளை, அரும்புத்தகங்களை இழந்ததால், கொள்ளையடிக்கப் பட்டதால் தாழ்ந்தது. இதுவெல்லாம் உண்மையான இந்திய வரலாறு.
7. வேத கால மதம் என்ன சொன்னது?
உலகத்தில் வளமும், அன்பும், அமைதியையும், இறையுணர்வும் பின்னிப் பிணைந்து ஞான ஒளி பரவவேண்டும் எனச் சொன்னது.
8 .மனு தர்மம் என்ன சொல்கிறது?
பசுவுக்குக் கூட நீதி, இளவரசனுக்குக் கூடத் தண்டனை என்றது. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதை மருத்துவர் அறிவித்தாலும், நான்கு ஆண்கள் கண்ணால் வன்புணர்ச்சியைப் பார்த்ததாக இமாம் முன்பு சாட்சி சொல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத்தான் சவுக்கடி தண்டனை என்று உங்கள் இஸ்லாம் ஷரியத் போலச் சொல்லவில்லை.
9. ஒரு பெண்ணை ஐந்து பேர் பகிர்ந்து கொண்ட கலாச்சாரம் யாருடையது?
மஹாபாரதத்தைப் படிக்கக்கூட வேண்டாம். டி.வியில் பார்த்தாலே விடை தெரியும்; கிருஷ்ண பரமாத்மாவுக்கும் பாஞ்சாலிக்கும் நடக்கும் உரையாடலே இதை விளக்குகிறது. திரௌபதி ஒரு கணவனை விலக்கி இன்னொரு கணவனிடம் செல்லும்போது, முழுமையாக அவனுக்கே தன்னை அர்ப்பணித்து முந்தையவனை முற்றிலும் மறக்கும் மணத்திண்மையோடு இருக்கிறாள். ஒருவனுக்கே மனத்தில் இடம் கொடுக்கும் மனத்திண்மை என்பதற்கேற்ப ‘ஒவ்வொரு முறையும் தீக்குளித்து மனத் தூய்மையை நிரூபிக்கும் கற்பைக் கொண்டவள்’ எனகிறார் கிருஷ்ண பரமாத்மா.

கற்பு என்பது இருபாலருக்கும் உரியதாகும். இதைத்தான் இராமனும், கிருஷ்ணனும் நிரூபிக்கின்றனர். பெண்களுக்கு மட்டுமே கற்பு, ஆண்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘சேர்த்து’க் கொள்ளலாம் என்பது முகமதியரின் ஆதிக்க மனப்பான்மை. கணவர்கள் அல்லது அப்பெண்களுடன் வாழவேண்டிய ஆண்கள், பெண்களின்றி என்ன செய்வார்கள்? ஹிந்துமதம் கணிகையரை விரட்டிக் கொல்வது இல்லை. கணிகை மாதவிக்குக் கூட கற்புக்கரசி பட்டம் கொடுக்கிறார் ஜைன துறவி இளங்கோவடிகள். ஆனால் இஸ்லாம் அப்பெண்களையும் கல்லால் அடித்துக் கொன்றுவிடுமே?. ஹாரத்தில் பூட்டி எனக்கு மட்டும் என ஆக்கிரமிப்பானே?. கிருஷ்ண பரமாத்மா ஒரு கணிகையின் பாட்டுக்கு ஒவ்வொரு இரவும் நடனமாடி மோட்சமளிக்கும் கதை பாகவதத்தில் வருகிறது.
ஒரு சிலரே அனைத்து பெண்களையும் வைத்துப் பூட்டிக் கொண்டால், கணிகையர்களையும் அனுமதிக்காவிட்டால், பெண் துணையின்றித் தவிக்கும் ஆண்கள் என்ன ஆவார்கள்? இப்படித்தான் ஆவார்கள்:
(http://en.wikipedia.org/wiki/Pederasty_in_the_Middle_East_and_Central_Asia ) பெண்களை விட தாடி முளைக்காத இளைஞர்கள் காம உணர்வுகளைத் தூண்டுபவர்களாக அமைந்தனர்:
It is related …. “Beware of beardless youth for they are a greater source of mischief than young maidens.” [4]
Likewise, the imam and legal scholar Sufyan al-Thawri (d. 783 CE) asserted, regarding sexual temptation, that “If every woman has one devil accompanying her, then a handsome lad has seventeen.”[5]

இந்த மாதிரி கலாச்சாரத்தை வைத்துக் கொண்டு பாஞ்சாலியைப் பற்றிப் பேசும் தைரியத்துக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
10. வர்ணாசிரமம் என்பது என்ன?
மக்களின் தொழிலை வைத்து அவர்களின் குணாதிசயங்களையும், அவர்களுக்கான தர்மங்களையும் விளக்குவதுதான் வர்ணாசிரமம். உதாரணத்துக்கு ஒரு வைசியனுக்கு, வேலையாள் சரியாக வேலை செய்யவில்லை என்று தண்டனை கொடுக்கவோ, கொலை செய்யவோ அனுமதி இல்லை. அடிமை வைத்திருக்க அனுமதியில்லை. அவ்வாறு கொலை செய்தால் ஷத்ரியனுக்கு அந்த வைசியனை கைது செய்யவும், அரசனுக்கு அந்த வைசியனுக்கு மரண தண்டனை கொடுக்கவும் வர்ணாசிரமும், மனுநீதியும் சொல்கிறது. அதேநேரத்தில் இஸ்லாம், வியாபாரிகளுக்கு ‘ஹபீப்’ எனப்படும் அடிமைகளை வைத்திருக்கவும், அடிமைப் பெண்களை போகத்திற்கு உபயோகம் செய்யவும், ஒத்துழைக்காத அடிமைகளைக் கொல்லவும் அனுமதிக்கிறது.

11. அதன் விளைவுகள் எப்படிப்பட்டவை?
இதனால் தீமைகளும் ஏற்பட்டன. பிராமணர்கள் தமிழ் நாட்டில் வளம்பெருவதற்கு வருவதற்கு முன்பே எழுதப்பட்ட தொல்காப்பியம் தமிழருக்குள் எல்லா விதமான சாதி வேறுபாடுகளும், கொடுமைகளும் இருப்பதைக் காண்பிக்கிறது. பிராமணத் தாக்கமற்ற இலக்கியமான தொல்காப்பியம் தலித்களை ‘புலையர்’ என்று இழிவாகக் குறிப்பிட்டு சமூக வேறுபாடுகள் ஆரியர்களுக்கு முன்பே இருந்தன என்று நிரூபிக்கிறது. வர்ணாசிரமம் இந்த வேறுபாட்டை மேலும் வரைமுறைப் படுத்திய பாவத்தைச் செய்தது.

12. அது எங்கே இருந்து வந்தது?
ஹிந்து மதத்திலிருந்து. தமிழர்களிடம் வேறு வடிவத்தில் முன்பே இருந்தது.
13. கூட்டம் கூட்டமாக, கும்பல் கும்பலாக ஏன் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்?
உங்களைப் போன்றவர்களின் ‘இராமன் அனுமனிடம் சீதையின் அல்குள் பற்றிப் பேசினான்’ – என்பது போன்ற இழிவான பிரச்சாரங்கள், பொய்களை நம்பி ஏமாறுவதால். இன்னதென அறிகிலார் தாம் செய்வது. இஸ்லாமை விட ஜாதி வேறுபாடு எங்குமே இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உயர் ஜாதி, கீழ் ஜாதி, அதற்கும் கீழ் ஜாதி, நாவிதர், செருப்பு தைப்பவர், அடிமை, உயர் ஜாதி ஷேய்க், பதான், மரைக்காயர், ஹக்கீம், ஹஜ்ஜம், லெப்பை, ஹபீப் … எனப்பல ஜாதியுண்டு. 1990 களுக்குப் பின்பும் சூடான் நாட்டில் ஷேக் ஜாதி முஸ்லீம்கள், நீக்ரோ முஸ்லீம்களை(ஹபீப் ) அடிமையாக வைத்துக் கொண்டு இருக்கின்றனர் http://www.meforum.org/319/the-un-finds-slavery-in-the-sudan. இந்த முஸ்லீம் ஜாதி அடிமை முறையை எதிர்ப்பவர்கள் மீது ‘ஃபத்வா’ வழங்கப்படுகிறது. ஹிந்துக்களில் கடவுளே எல்லா ஜாதிகளிலும் இருந்து வந்துள்ளனர். வேடுவனும் மஹாவிஷ்ணு வின் ரூபமே. ஈழவரான நாராயண குரு பின்னால் எத்தனையோ ஆயிரம் பிராமணர் சீடர்கள். ஆனால் முஸ்லீம்களுக்கோ அப்துல் கலாமே ‘லெப்பை’ தான்.

14. இந்தியாவில் உள்ள தலித்களும், சீக்கியர்களும், நாத்திகர்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ செய்கிறார்களா?

வோட்டு வேண்டுமென்றால் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார். தலித்கள் ஹிந்து எனவே சொல்லிக் கொள்வார்கள்.

சீக்கியர்கள் ஹிந்துக்களே. அவர்கள் ஹிந்துக்களின் சாத்வீக முறையைப் பயன்படுத்தி முஸ்லீம்கள் தொடர்ந்து இன அழிப்பு செய்துவருவதை எதிர்த்தே ‘ஹிந்துக்களில் நாங்கள் சிங்கங்கள்’ என்று சொல்லி சிங்க அல்லது சீக்கிய மதத்தை ஆரம்பித்தனர். அவர்களின் நோக்கமே முஸ்லிம்களின் வெறியாட்டத்திற்கு ஒரு முடிவு கொண்டுவருவதே.

ஹிந்து மதத்திற்கு உறுதுணையாக, இஸ்லாத்திற்கு எதிராகத் தொடக்கப்பட்ட ஒரு மதத்தை, ஹிந்து மதத்திற்கு எதிர் என்று சொல்லுதல், படித்த பேராசிரியருக்கு கண்ணியமான செயலா?

15. எதற்காக அம்பேத்கார் ஒரு லட்சம் தலித் மக்களோடு பௌத்தம் தழுவினார்?
ஹிந்துமதத்தின் கிளைமதமானதும், மாண்டூக்ய உபநிஷதத்தின் சாரமானதுமாகிய பௌத்த மதத்தில் அம்பேத்கர் சேரக் காரணம் அதில் ஜாதி வேறுபாடு இல்லையென்பதே. சரி, ஏன் அவர் அந்த ஒரு லட்சம் பேரையும் சேர்த்துக் கொண்டு இஸ்லாமுக்கு முல்லாக்கள் கட்டாயப் படுத்தியும் மாறவில்லை? அவரே சொல்கிறார்: “இஸ்லாமில் ஜாதி வெறி அதிகாமாகவே காணப்படுகிறது. முஸ்லீம்கள் மோப்லா கலவரத்தின் போது தலித் ஹிந்துக்களை கொடுரமாக ஆயிரக்கணக்கில் கொன்றனர்” http://books.google.com/books?id=riTiTry4U3EC&pg=PA209&lpg=PA209&dq=ambedkar+mopla&source=bl&ots=6jeX-LOMXc&sig=ot3N1OoKwEDHbrtcmpJyTSsGP1c&hl=en&ei=ixobSvuCN4r0MqP7_ZAP&sa=X&oi=book_result&ct=result&resnum=5

16. சிவனடியார்களுக்கும் வைணவர்கள்களுக்கு இடையே நடந்தது என்ன?

அவரவர் அவரவர் மனப்படி தத்தம் பெருமான் பெருமைகளைப் பாடினர். ஷியாவுக்கும் சுன்னிக்கும் நடுவில் நடப்பதுபோல் ஏதும் நடக்கவில்லை.

17.ஜைனர்கள் ஏன் கழுவில் ஏற்றப்பட்டார்கள்?

ஜைனர்களைக் கழுவில் ஹிந்துக்கள் ஏற்றியதாக சொல்கிறீர்கள். ( ஆமாம் ஆடு நனைந்தால் ஓநாய் ஏன் அழுகிறது?) ஆனால் ஜைனர்களோ “அவ்வாறு நடக்கவில்லை, முகம்மதியர்கள்தான் ஜைனர்களைக் கொன்றனர்”, என்கின்றனர். ஜைன இலக்கியங்களில் ஜைனர்கள் ஹிந்துக்களுடன் ஆத்ம விசாரத்திலும், வேதாந்தப் போட்டியிலும் தோற்றால் கழு ஏறுவோம் என்று சூளுரைத்து அவர்களே ஏறியதாகத்தான் உள்ளது. ஹிந்துக்கள் மீது மிகுந்த பிரியம் கொண்ட ஜைன மதத்துறவி இளங்கோவடிகள்கூட மகாவிஷ்ணுவைப் புகழ்ந்து பாடுகிறார். அப்படி இருக்க, ஜைனர்களைக் கொலை செய்தது முஸ்லீம்கள். பழி ஹிந்துக்களுக்கா?

ஜைனர்களைப் பார்த்தாயிற்று. பௌத்தர்கள்? ஆப்கானிய காட்டுமிராண்டி முஸ்லீம் அரசன் முகம்மது பாக்தியர் கில்ஜி 1193ம் வருடம் நாளந்தா பல்கலைக் கழகத்தில் நுழைகிறான். திருக் குர்-ஆன் உள்ளதா எனக் கேட்கிறான். இல்லையென்றறிந்தவுடன் உள்ளேயிருந்த அனைத்து பேரறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், விஞ்ஞானிகளையும், பல்லாயிரம் புத்த மதத்தினரையும் உயிரோடு கொளுத்தி அவர்கள் தீக்காயங்களுடன் துடிப்பதைக் கண்டு ரசிக்கிறான். புத்த மதத்தை இந்தியாவில் இருந்து வேரறுத்த நிகழ்வு என வரலாற்று அறிஞர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். பௌத்தர்களை ஹிந்துக்கள் கழுவேற்றினர் என்று இந்தப் பழியைக் கூட ஹிந்துக்கள் மீது போட கொடுத்துள்ளார்.

18. குஜராத்தில், கோயமுத்தூரில் நடந்தது என்ன?

முஸ்லீம்கள் வழக்கம்போல் கொலைகளை ஆரம்பித்துவைத்தனர். அவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்று அவர்கள் நினைக்கவில்லை. காலம் கடந்து வருந்தி என்ன பயன்?

19. Islam is the fastest growing religion in USA என்று ஹிலாரி கிளிண்டன் ஏன் சொன்னார்?
Even more men are turning to be homosexuals in US faster than ever. What we can do Professor Nahoor Rumi?

நன்றி,
கார்கில் ஜெய்.
kargil_jay@yahoo.com

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்