உண்மையின் ஊர்வலங்கள்.. -1
புதியமாதவி
(ஊர்வலம் 1)
உண்மைகள் சில சமயங்களில் கற்பனைகளை விட அற்புதமானவை. அழகானவை. அதனால்தான் உண்மையின் ஊர்வலங்கள் எவ்வித ஒப்பனையுமில்லாமல் உங்கள் வீதிகளில் வலம் வர வேண்டும் என்று
விரும்புகிறேன். 100 % கற்பனை கலக்காத உண்மையின் தரிசனங்களில் மனம் உருகிக் கரைந்து போகிறது.இப்படியும் இருக்கிறார்களா ? இது நிஜம்தானா ? இவர்கள் நம்முடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா ? இந்தச் சாதாரண மனிதர்களின் உண்மை முகங்களில்தான் எத்தனை இனிய கவிதைகளின் சாயல். வாசிக்க வாசிக்க நாமே அந்த உண்மையாகி, உண்மையில் கலந்து ஊண் உருகி உயிர்க் கரைந்து நம் சுயமிழந்து…உண்மையின் சுமையிலும் ஒரு சுகம்.
பிப்ரவரி 02 , 2006 வந்தால் அவனுக்கு , வினய்பாலுக்கு வயது 17. அவன் மும்பையின் ஜோகேஸ்வரி புறநகர்ப்பகுதியில் தன் அப்பா ராம்பாலுடன் இருக்கிறான். இந்த ஆண்டு +2 தேர்வு எழுதுகிறான். தேர்வுக்கு முன்பு தன் பிறந்த நாளில் தன் தாயின் ஆசி பெற அவன் நானாவதி மருத்துவமனைக்குப் போனான். அவன் தாய் காமாதேவிக்கு என்ன வியாதி என்று கேட்காதீர்கள். அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே அவள் இந்த மருத்துவமனையில் பெட் நம்பர் 33ல் தானிருக்கிறாள். அவனை அவளுக்கு அடையாளம் தெரிவதில்லை. 1989ல் சிசரியன் ஆபரேஷன் செய்து அவன் பிறந்ததலிருந்து அவளுக்கு அவள் மகனை அடையாளம் காண முடிவதில்லை. அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் கொடுத்த மயக்கமருந்தின் அளவு அதிகமானதால் அவள் மூளைப் பாதிக்கப்பட்டுவிட்டது. அவளால் பேச முடிவதில்லை. யாரையும் அடையாளம் காண முடியாத வெறித்தப் பார்வையுடன் தொடர்கிறது இந்தப் பதினேழு வருடங்களாக இந்த மருத்துவமனையில் அவள் வாழ்க்கை.
கோர்ட், வழக்கு, விசாரனை.. எல்லாம் இருந்தும் என்ன பயன் ? அவளுடைய கேஸில் மருத்துவர்களின் பெருந்தவறு இருப்பதால் இதோ 17 வருடங்களாக மருத்துவமனையில் அவள் இருப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது!
ஒவ்வொரு நாளும் (Maharashtra telephone nigam ltd) எம்.டி.என்.எல். ஆபிஸில் கடைநிலை ஊழியராக இருக்கும் ராம்பால் ஆபிஸிலிருந்து நேராக மருத்துவமனைக்குத்தான் போகிறார். தன் மனைவிக்கு தன் கையால் இரவு உணவு கொடுத்துவிட்டு இரவு 10 மணிக்குப் பின் வீடு திரும்புகிறார். இத்தனை வருடங்களாக இதுவே அவர்
வாழ்க்கையாகிவிட்டது. ‘யாராவது ஊட்டினால் கொஞ்சம் சாப்பிடுகிறாள். அதுதான் தினமும் வந்து இரண்டு மணிநேரம் அவளூடன் இருக்கிறேன். இரவு உணவு ஊட்டிவிட்டபின் வீடு திரும்புகிறேன். என்னால் அவளுக்கு செய்ய முடிந்தது
இவ்வளவுதான் ‘ என்று சொல்லுகிறார் ராம்பால்.
மலாட் மிட்டல் கல்லூரியில் படிக்கும் அவர்களின் மகன் வினய்பால் ‘+2வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வெற்றி பெறுவதுதான் என் பெற்றொர்களுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் ‘ என்கிறார்.
1988ல் ராம்பாலுக்கும் காமாதேவிக்கும் திருமணமாகி இருக்கிறது. ஓராண்டு மணவாழ்க்கையில் வினய் பிறந்திருக்கிறான்.
**
வெறித்தப் பார்வையுடன்
என்னை விலக்கி வைக்கும் விழிகளில்
உறைந்தப் பனிக்கட்டியாய்
இறுகிக்கிடக்கிறது எங்கள்காதல்.
தொடுதலின் வெளிச்சங்கள்
இல்லாத துருவக்கோட்டில்
எப்போதாவது
எட்டிப்பார்க்கலாம்
பனியை உருக்கும் பகலவன்.
அதுவரை நித்தமும்
என்னவளுக்காய்
எரிந்து கொண்டிருக்கும்
என்னுயிர்த் தீயின்
அகல்விளக்கு.
**
(Ref: Mumbai Mirror, Jan31, 2006 pg 2
An oversose of anaesthesia at the time of the cesarean
operation caused permanent brain damage to Gama dEvi. Her
medical condition is known as hypoxic brain damage. she cannot
recognize anyone. Nor can she speak ‘ said medical superindent
Dr. Ashok B hatolkar.
vinaypal who has been raised by his father Rampal in a slum
in Jogeshwari, will seek her blessings on the morning of his birthday Feb 2)
புதியமாதவி, மும்பை
puthiyamaadhavi@hotmail.com
- கீதாஞ்சலி (62) உனை நாடிச் செல்வது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!
- வர்க்க பயம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9
- எட்டாயிரம் தலைமுறை
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)
- பார்வைகள்
- பூவினும் மெல்லியது…
- தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்
- வரலாற்றை எழுதுவதை முன்வைத்து
- முஹம்மது நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள் ? ( ஆங்கிலத்தில்: இப்ராஹீம் ஹூப்பர் )
- தியானம் கலைத்தல்…
- அருவி
- அல்லாவுடனான உரையாடல்
- பெரியபுராணம் – 77 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஒரு பாசத்தின் பாடல்
- கவிதைகள்
- கவிதைகள்
- எடின்பரோ குறிப்புகள் – 9
- சில கதைகளும், உண்மைகளும்
- காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர்
- நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் [100 Years of Einstein ‘s Theories]
- புனித முகமூடிகள்
- தகவல் பிழைக்கு வருந்துகிறேன்
- விவாதம்:சூபிசம் – வகாபிசம் -உள்ளும் புறமும்
- பழையத் துறவியும் ஜானி வாக்கரும் !
- நான் கண்ட சிஷெல்ஸ் – 11 சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்
- பயணக்கிறக்கம் (Jet lag)
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3
- நீதிக்குத் தவித்த நெஞ்சம் – டி.வி.ஈச்சரவாரியாரின் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘
- அவுஸ்திரேலியாவில் தமிழ் போதனாமொழி -மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா -“ உயிர்ப்பு” நூல் வெளியீடு
- உண்மையின் ஊர்வலங்கள்.. -1
- உயிர்மெய் – பெண்கள் காலாண்டிதழ்
- கடிதம் – ஆங்கிலம்
- பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை
- கவிதைகள்
- இரு கவிதைகள்
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- செலாவணியாகாத நாணயங்களைத் திரும்பப் பெறுகிறேன்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘
- துக்ளக்கில் வெளிவந்த மலர் மன்னன் கட்டுரையும், கிறிஸ்துவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரமும்
- புலம்பெயர் வாழ்வு (1)
- மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்
- கலைச்செல்வன் ஓராண்டு நினைவொட்டிய நாள் – 5 மார்ச் 2006
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)