கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….
லதா ராமகிருஷ்ணன்
(படத்தில் ந முத்துசாமி , எஸ் வைதீஸ்வரன்)
‘எழுத்து ‘ காலம் முதற்கொண்டு எழுதி வருபவர் கவிஞர் வைதீஸ்வரன். கவிதையோடு இசை, நாட்டியம், ஓவியம், நாடகம் முதலிய பிற கலைகளிலும் நாட்டமும், பயிறிசியும் உடையவர். சிறுகதையாசிரியர். 1935ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி பிறந்த இவரது எழுபதாவது வயது நிறைவு விழாக் கூட்டம் சமீபத்தில் சென்னை மயிலாப்பூரிலுள்ள ‘கோகலே ‘ கூடத்தில் சிறப்பாக நடந்தேறியது. ‘விருட்சம் ‘ அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் நா.முத்துசாமி, என்.எம்.பதி, இரா.முருகன், சுஜாதா விஜயராகவன், கவிஞர். அமிர்தம்சூர்யா முதலியோர் கவிஞர்.வைதீஸ்வரனின் படைப்புவெளி குறித்தி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இலக்கிய ஆர்வலரும், திறனாய்வாளரும், இந்த விழா நடக்க உதவியவருமான டாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் கூட்டத்திற்கு தலைமை தாங்க, கவிஞர். சிபிச்செல்வன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
‘ப்ருஹத்வனி ‘ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரு வைதீஸ்வரனின் கவிதைகள் சிலவற்றை பாடலாக இசைக்க, நவீன நாடக இயக்கக் கலைஞரான திரு. ஜெயராவின் ‘தியேட்டர் லாப் ‘ குழுவினர் கவிஞரின் கவிதைகள் சிலவற்றை அற்புதமாக நிிகழ்த்திக் காட்டினார்கள். இசை, நாட்டிய வல்லுனரும்,கலைவிமரிசகருமான திருமதி சுஜாதா விஜயராகவன் தனது உரையில் நவீன தமிழ்க் கவிதைகளை ராகம், தாளத்தோடு பாட முடியும், பரதநாட்டியமாக ஆட முடியும் என்றும், தான் மேற்கொண்டு வரும் அத்தகைய முயற்சிகளுக்கு திரு. வைதீஸ்வரன் அளித்து வரும் ஊக்கம், ஆதரவு குறித்தும்விரிவாகப் பேசினார். திரு. நா.முத்துசாமி தனக்கும், கவிஞர் வைதீஸ்வரனுக்கும் இடையில் நிலவும் நீண்ட கால நட்பு குறித்தும் , வைதீஸ்வரனின் கவிதைகள் தரும் காட்சியனுபவங்கள் குறித்தும் உரையாற்ற, திரு என்.எம்.பதி ‘கசடதபற ‘ காலத்திலிருந்து நவீன கவிதை இயக்கம் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பாணிகளையும், போக்குகளையும் , அவற்றினூடாய் வைதீஸ்வரனின் கவிதைகள் பயணமாகி வந்துள்ள விதம் குறித்தும் பேசினார். இணைய இதழ்களில் கவிஞர் வைதீஸ்வரனின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய திரு. இரா.முருகனின் உரையில் கவிஞரைப் பற்றிய பல முக்கியமான விவரக்குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர். அமிர்தம்சூர்யா வைதீஸ்வரனின் படைப்புவெளி குறித்து இரண்டு பேருக்கு இடையே நிகழும் உரையாடலாய் தன்னுடைய கட்டுரையை வித்தியாசமாகக் கட்டமைத்திருந்தார்.
திரு. ஜெயராவின் நாடகக் குழு கவிஞர் வைதீஸ்வரனின் நான்கைந்து கவிதைகளை மேடையில் நிகழ்த்திக் காட்டிய விதத்தில் கவிதைகளின் வரியிடை வரிகளும் நம் கண் முன் விரிந்தன என்றால் மிகையாகாது. நாடகம் என்பதை மூளைவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், அன்ன பிறருக்குமான சிகிச்சைமுறையாகப் பயன்படுத்தி வருவதோடு, சமூகப் பிரக்ஞையோடு மாற்று நாடகவெளியில் இயங்கி வருபவருமான திரு. ஜெயராவ் சில மாதங்களுக்கு முன்பு திரு. வெளி ரங்கராஜனின் இயக்கத்தில் மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ என்ற சிறுகதையை அருமையாக மேடையில் நிகழ்த்திக் காட்டினார். இவருடைய நாடகக் குழுவில் ஆராய்ச்சி மாணவர்கள் தொடங்கி வாழ்வொன் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் அடக்கம். பார்வைக் குறைபாடு உடைய மாணவர் ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார். இந்த இளங் கலையார்வமும், தேர்ச்சியும், மனிதநேயமும் அந்த நாடகங்களில் நுட்பமாக வெளிப்படுவதைக் காண முடிந்தது. சமூகப் பிரக்ஞை மிக்க கவிதைகளை கணிசமான அளவு எழுதியிள்ள கவிஞர் வைதீஸ்வரன் கடந்த சில ஆண்டுகளாக ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் ‘ என்ற ‘பார்வையற்றோர் நன்னல அமைப்பின் இலக்கிய முயற்சிகளுக்கும் பங்களித்து வருகிறார்.
ஈன்றளவும் கலை, இலக்கியத் துறைகளில் தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆரவாரமின்றி அளித்து வரும் மூத்த கவிஞர் வைதீஸ்வரனிக்கு விழாக்குழு சார்பில் எளிய நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. எழுத்தாளரும், தனியொருவராக கடந்த பதினெட்டு வருடங்களாக ‘விருட்சம் ‘ என்ற சிற்றிதழையும், இலக்கிய அமைப்பையும் நடத்தி வருபவருமான திரு. அழகியசிங்கர் நன்றி கூற நிறைவு பெற்ற இந்த இலக்கியக் கூட்டத்திற்கு எழுத்தாளர்களும், பிற கலைத்ததுறைகளைச் சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வருகை தந்திருந்தனர்.
—-
ஜெயராவ் நாடக நிகழ்விலிருந்து
- 4: 03
- பால்வீதி
- ஆயிரத்து முன்னூறு ரூபாய்
- தேசியப் பொருளாதாரம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)
- என் புருஷன் எனக்கு மட்டும்
- தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!
- அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்
- கண்காணிப்பு சமுதாயம்
- பெண்ணீயம் என்பது
- பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)
- கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை
- ஒரு கடல் நீரூற்றி
- புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்
- மழலைச்சொல் கேளாதவர்
- ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு
- தீயில் கரையத்தானே
- கீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தீயில் கரையத்தானே
- சாவி ? ? ?
- இதயம் முளைக்கும் ?
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)
- சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்
- தெளிவு
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II
- அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.
- கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….
- எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்
- கேள்வி-பதில்
- திறந்திடு சீஸேம்!
- 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005
- விம்பம் – குறும்படவிழா
- நண்பர் சுரா அவர்களுக்கு
- கற்புச் சொல்லும் ஆண்!
- பெரியபுராணம் – 62
- கைகளை நீட்டி வா!
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I
- இதயம் முளைக்கும் ?
- புதுமையும்,பெண்ணியமும்!
- காலம்
- அலறியின் மூன்று கவிதைகள்
- இலையுதிர் காலம்
- கவிதைகள்