எது என் பட்டம் ?
கோமதி நடராஜன்
விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல்
சுழன்றாடும் பட்டங்களில் என் பட்டம் எது?
வண்ணமெல்லாம் குழைத்தெடுத்து
ஓவியமாய் மின்னும் பட்டமா?
என் கை சுற்றியிருந்த ,கயிற்றை இழுத்தேன் ,
வரவில்லை அந்த பட்டம்.
அன்னம்போல் வடிவாகி, நீல வானமே
நீரலையாய் ,நீந்தி ஆடும் அந்த பட்டமா?
இழுத்தேன் ,இம்முறையும் வரவில்லை
எனக்குச் சொந்தமில்லா அந்த பட்டம்.
பட்டுத்துணிகளும் சின்ன மணிமாலைகளுமாய்
கண் கவரும் கலையான பட்டமா/
இழுத்தும் ஏனோ வரவில்லை
வண்ணமில்லை வடிவம் இல்லை
வெற்றுத்தாள் பறப்பது போல்
வளைந்து நெளிந்து பறக்கும் சாதா பட்டமா?
இழுத்த உடன் என் கையில் இறங்கியது.
இறைவன் சொன்ன சேதியை எனக்குரைத்த்து.
அழகாய் இருக்கிறது என்று,
அடுத்தவர் பட்ட்த்துக்கு ஆசைப் படாதே.
உன் பட்டம் உருவாவது ,உன் கையில் .இருக்கிறது
வண்ணத்தால் பிரகாசிப்பது உன் எண்ணத்தில் இருக்கிறது.
அடுத்தவரது உரிமையை உனதாக்கிக் கொள்ளாதே
அவரது திறமையை உனக்கென அபகரிக்காதே.
அவரவர் பட்டம் அவரவர்களுக்கே.
அடுத்தவன் பட்டம் உனக்கு வராது
உன் பட்டம் யாரிடமும் போகாது .
புரிந்து கொண்டால்
இதயம் இனிய பட்டமாகும்
சிறகின்றி சந்தோஷ வானில்
சிட்டாய் பறக்கலாம்
ஆனந்தக்கடலில்
துடுப்பின்றி அழகாய்
நீந்தலாம்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
- இந்தியாவின் தேவை சன்னமான கோவை
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16
- கரு
- கடம்
- விடிவெள்ளி
- கத்தியின்றி..ரத்தமின்றி..
- நீதியும் சமூக நீதியும்
- அம்மாவின் இசை
- நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல
- இரு பிரம்மப் படிமங்கள்
- சாதிகள் உண்டடி பாப்பா
- இரவுக்காதல்
- இரண்டு கவிதைகள்
- சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்
- நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…
- எது என் பட்டம் ?
- நினைவுகளின் சுவட்டில் – (62)
- ரசிகன் கவிதைகள்
- வளரும் பயிர்…
- சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி
- தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி
- அலைபேசியும் ஆடை அலங்காரமும்!
- சிவன்கோவில் கவியரங்கம்
- இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா
- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’
- அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு
- அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’
- சத்தமில்லா பூகம்பம்
- ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)
- காகிதச்செடிகள்
- ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)
- சகுனம் பற்றி…
- பிறருக்காக வாழ்பவன்
- ப மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- வாண்டு பருவமும் வயதான கிழவியும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)